இஸ்ரோ தலைவர் தகவல்-சோதனை ஓட்டத்தில் ககன்யான்.!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் அவர்கள், அன்மையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது என்னவென்றால், சந்திராயன் 2 செயற்கைகோளின் ஆரபிட்டர்
சிறப்பாக வேலை செய்துவருகிறது என்றும், அதிலிருந்து கிடைக்கும் தகவல்களை நாம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம் என்று தெரிவித்தார்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்
பின்பு இந்த நவம்பரில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒன்று ஏவப்பட உள்ளது என்றும் சிவன் அவர்கள் தெரிவித்தார். மேலும்பல ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளன என்றும், வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் வேலைகளும் சிறப்பான
முறையில் நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

விண்வெளி வீரர்கள்
குறிப்பாக ககன்யான் திட்டத்துக்கான விண்வெளி வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது எனவும், தேர்வு செய்யப்படும்வீரர்கள் ரஷ்யாவுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சிவன் அவர்கள் தகவல் தெரிவித்ததார்.

இஸ்ரோ அமைப்பு
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளம் உலக அளவில் மிகவும் உயர்ந்த
ஒரு மட்டத்துக்கு செல்லும். குறிப்பாக இஸ்ரோ அமைப்பு பல்வேறு புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் வேலைகளைசிறப்பாக செய்து வருகிறது.

செமி கிரோயோஜெனிக் இன்ஜின்கள்
இப்போது ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் முழுவதும் பூர்த்திசெய்யப்பட்டு சோதனை நடைபெற்றுவருகின்றன். தற்போது தற்போது கிரையோஜெனிக், செமி கிரோயோஜெனிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மீத்தேனில் இயஙகும் ராக்கெட்
பின்பு வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தின் மூலம் இயங்கும் ராக்கெட் உட்பட ராக்கெட் இன்ஜின்களை வடிவமைக்கும் திட்டத்தையும் மீத்தேனில் இயஙகும் ராக்கெட் இன்ஜின் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications