Just In
- 8 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 9 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 10 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 11 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்திய ஏவுகணை சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து-கதறும் நாசா.!
நடந்த சோதனை மூலம் ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது.
நடந்த சோதனை மூலம் ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது.
புவி வட்டப்பாதையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும் செயற்கைகோளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவது என்பது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஒரு தோட்டாவை 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மற்றொரு தோட்டாவால் சுட்டு நாசமாக்கும் திறனுக்குச் சமம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
4வது நாடு இந்தியா:
அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே தற்போது இத்தகைய வல்லமையைப் பெற்றுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.
20-22 கி.மீ. உயரம் வரையில் உள்ள புவிமண்டலத்துக்கு உட்பட்ட தூரத்திலோ, புவி மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளையோ இந்த ஏவுகணையால் தாக்க முடியும். இந்த தகவலை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து:
ஆனால் இந்த செயற்கை ஏவுகணை சோதனை மூலம் விண்வெளியில் உருவாகும் குப்பைகள் மற்ற செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறப்பட்டது. தற்போது இந்த சோதனை மூலம் உருவாகி உள்ள குப்பைகளால் சர்வதேச விண்வெளி நிலைபாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
விண்வெளியில் உடைந்த 400 பாகங்கள்:
இதுகுறித்து நாசா விண்வெளிமையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் இன்று நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
''விண்வெளியில் தங்களின் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக, இந்தியா ஏ-சாட் எனும் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை தாக்கி அழித்து நடத்திய சோதனை உண்மையில் பயங்கரமானது. ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன.
இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது.
பெரும் ஆபத்து:
இதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது.. விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக, பெரியளவில் இருக்கிறது. இந்த பாகங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது.
செயற்கைகோள்களும் இடையூறு:
இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வுகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்போது, விண்வெளியில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும்.
கதறும் நாசா:
ஒருநாடு இதுபோன்று சோதனை செய்யும் போது, மற்ற நாடுகளும் நாங்களும் இதுபோன்ற சோதனையைச் செய்கிறோம் என்று இறங்கினால், விண்வெளி என்ன ஆவது? இதை ஏற்க முடியாது. எங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புவரும் என்பது குறித்து நாசா தெளிவாக இருக்கிறது.
44 சதவீதம் அதிகரிப்பு:
விண்வெளியில் மிதந்து வரும் செயற்கைக்கோள் குப்பைகள் குறித்து ஒவ்வொரு மணிநேரமும் நாசா தகவல்களைச் சேகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து நாங்கள் செய்த ஆய்வின்படி, இந்த உடைந்த பாகங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து கடந்த வாரத்தில் இருந்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் இருப்பவை அடுத்த 10 நாட்களுக்குள் சிதைந்துவிடலாம்.
சீனாவின் குப்பை கழிவுகள்:
கடந்த 2007-ம் ஆண்டு இதேபோன்ற சோதனையை சீனா மேற்கொண்டது. சீனா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் இன்னும் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. விண்வெளியில் இத்தகைய செயல்களுக்கு இதுபோன்ற சோதனை மேற்கொள்ளும் நாடுகள்தான் பொறுப்பு.
பொறுப்புடன் நடக்க வேண்டும்:
விண்வெளியில் உள்ள சூழல் குறித்து அறிந்து, நாடுகள் பொறுப்புடனும், விண்வெளி போக்குவரத்து மேலாண்மை குறித்தும் அறிந்து நடக்க வேண்டும். விண்வெளி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்''. இவ்வாறு பிரிடென்ஸ்டைன் தெரிவித்தார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470