Home
Scitech

டேங்குகளை அழிக்கும் இந்திய ஏவுகணை வெற்றி-சீனா பாகிஸ்தானுக்கு பீதி.!

இந்த ஏவுகணை இந்திய உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதால், சீனாவும் பாகிஸ்தானும் பீதியடைந்துள்ளன. இது ஹெலிகாப்பட்டரில் இருந்து ஏவப்படும். இதற்கு ஹெலினா ஏவு

போர்களத்தில் எதிரி நாட்டு டேங்குகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைத்திருந்த ஏவுகணை இந்தியா சோதனை செய்தது.

டேங்குகளை அழிக்கும் இந்திய ஏவுகணை வெற்றி-சீனா பாகிஸ்தானுக்கு பீதி.!

இந்த ஏவுகணை இந்திய உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதால், சீனாவும் பாகிஸ்தானும் பீதியடைந்துள்ளன. இது ஹெலிகாப்பட்டரில் இருந்து ஏவப்படும். இதற்கு ஹெலினா ஏவுகணை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் அத்துமீறும் சீனா:

எல்லையில் அத்துமீறும் சீனா:

இந்தியா எல்லைப்பகுதியில் அவ்வப்போது, சீனா ராணுவம் உட் புகுந்து வருகின்றது. மேலும் இந்தியாவில் ஒரு சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.

தனது படையை காட்டி எல்லையில் அத்துமீறி வருகின்றது. இந்தியா எல்லையில் உள் வரை சீனா ராணுவம் ஒரு பகுதியில் தார் சாலை அமைந்துள்ளது.

 பாகிஸ்தான் அத்துமீறல்:

பாகிஸ்தான் அத்துமீறல்:

இந்தியா எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து இந்திய நிலைகள் மீதும் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றது பாகிஸ்தான். காஷ்மீரில் ஒரு சில இடங்களையும் ஆக்கிரமித்து வைத்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்கி இந்திய எல்லைக்குள் அனுப்பி தாக்குதல்களையும் நிறைவேற்றி வருகின்றது. இன்வரையும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிக்கின்றது.

அதி நவீன ஆயுதங்கள்:

அதி நவீன ஆயுதங்கள்:

சீனா தனது படையில் அதி நவீன படை ஆயுதங்களையும் டேங்குகளையும் வைத்துள்ளது. மேலும் சீனா முதல் பாகிஸ்தான் வரை சாலை அமைத்துள்ளது. தனது படையில் உள்ள அணு ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கும் வழங்கி வருகின்றது சீனா.

 தரமான அணு ஆயுதங்கள்:

தரமான அணு ஆயுதங்கள்:

ரஷ்யாவிடம் தரமான தொழில்நுட்பம் மற்றும் தாக்குதல் நடத்த ஏதுவான ஏராளமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. தற்போது வரை சீனாவின் கண்டுபிடிப்பு உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றது பாகிஸ்தான். இந்நிலையில்,சீனாவையும் தாண்டி ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

எல்லையில் கண்காணிக்கும்:

எல்லையில் கண்காணிக்கும்:

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.

600 பீரங்கி:

600 பீரங்கி:

இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90 உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி டாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

எல்லையில் நிறுத்தப்படும்:

எல்லையில் நிறுத்தப்படும்:

இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

இத்தாலில் இருந்து 120 துப்பாக்கி:

இத்தாலில் இருந்து 120 துப்பாக்கி:

இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்' ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஹெலினா ஏவுகணை:

ஹெலினா ஏவுகணை:

7 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணை, 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது, டேங்குகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகளில் மிகவும் நவீனமானதாக கருதப்படுகிறது.

பரிசோதனை வெற்றி:

பரிசோதனை வெற்றி:

இந்த ஏவுகணையானது ஒடிசாவின் பலசோர் மாவட்ட கடற்கரையில் பரிசோதிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஹெலினா, குறிவைத்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. நாட்டின் பாதுகாப்பு துறையில் ஹெலினா முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

பீதியில் சீனா, பாகிஸ்தான்:

பீதியில் சீனா, பாகிஸ்தான்:

போர்களத்தில் எதிரி நாட்டு ஏவுகணைகளையும் தவிடு பொடியாக்கும் இந்தியாவின் ஹெலினா ஏவுகணை சோதனையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடும் பீதி ஏற்பட்டுள்ளது.

மிலன் 2டி பீரங்கி:

மிலன் 2டி பீரங்கி:

இதன் படி, எதிரி நாடுகளின் பீரங்கி படைகளுக்கு எதிரான ஆயுதங்களை வாங்கும் முயற்சியில், இந்திய ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதற்காக 1000 கோடி ரூபாய் செலவில், பிரான்சில் இருந்து 3,000 மிலன் 2டி பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

 பாதுகாப்பு அமைச்சகம்:

பாதுகாப்பு அமைச்சகம்:

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, மிலன் 2டி பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவது குறித்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்டக் கூட்டத்தின் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 7000 எதிர்ப்பு ஏவுகணை தேவை:

7000 எதிர்ப்பு ஏவுகணை தேவை:

இந்திய ராணுவத்தில் சுமார் 850 வகையான ஏவுகணைகள் உள்ளன. இந்நிலையில் சுமார் 70,000 பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகள் தேவைப்படுவதாக ராணுவம் கூறியுள்ளது. இதன் அடிப்படியில் முதற்கட்டமாக 3000 மிலன் -2டி பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்கும் முறை:

தாக்கும் முறை:

மிலன் 2 டி ஏவுகணைகள் வெப்பத்தை அடையாளம் கண்டு இயங்கும் திறன் கொண்டவை. எதிரி நாட்டு பீரங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தை கண்டு உணர்ந்து, அவற்றின் இருப்பிடத்தை துல்லியமாக கணித்து தாக்கும் திறன் இந்த ஏவுகணைகளுக்கு உண்டு. இதனால் போர்களத்தில் எதிரிகளை திக்குமுக்காட வைப்பதோடு, இந்திய ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க முடியும்.

சீனாவுக்கும் அலறல்:

சீனாவுக்கும் அலறல்:

இந்தியா தனது பாதுகாப்பு படையில் பிரான்ஸ் நாட்டு ஏவுகணைகளையும் புகுத்துவதால், சீனாவின் பீரங்கி தாக்குதலுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Helena Missile Tests To Attack And Destroy Tanks : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X