செவ்வாயிக்கு முதல் நபராக நாசா அனுப்பும் பெண் யார்? செலவு 1.5 லட்சம் கோடி.!
நாசா செவ்வாய் கிரகத்துக்கு முதல் நபராக ஒரு பெண்ணை அனுப்ப இருக்கின்றது. மேலும், யார் அந்த விண்வெளி வீராங்கனை என்று ஆவல் ஏற்பட்டுள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத
நாசா செவ்வாய் கிரகத்துக்கு முதல் நபராக ஒரு பெண்ணை அனுப்ப இருக்கின்றது. மேலும், யார் அந்த விண்வெளி வீராங்கனை என்று ஆவல் ஏற்பட்டுள்ளது.

நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு ரூ.15 லட்சம் கோடி செலவாகும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியை ஒதுக்கும்படி நாசா கோரிக்கை விடுத்துள்ளது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்:
நாசா விண்வெளி ஆராய் மையம் விண்வெளிக்கு மனிதர்களை ஆராய்ச்சி செய்து வருகின்றது. மேலும், அதிக நிதியை ஒதுக்கி பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் முதன்மை விண்வெளி நிலையமாகவும் திகழ்கின்றது.

விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கலம்:
அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும் முதற்கட்டப் பணியில் நாசா இறங்கியுள்ளது.

1.5 லட்சம் கோடி செலவு:
முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவில் தங்கி மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நாசா முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாக நாசா நிர்வாகி (Jim Bridenstine) ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறியுள்ளார்.

செலவு அதிகம்:
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 விழுக்காடு அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார். நாசா விண்வெளி துறையில் அதிக கவனம் செலுத்துகின்றது நாசா. மேலும், பல்வேறு கட்ட ஆய்வுகளையும் நடத்திய வருகின்றது. மாறுபட்ட கோணத்திலும் ஆய்வை நாசா துவங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு முதல் நபராக பெண்:
செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பும் முதல் நபராக பெண்ணை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யார் அந்த விண்வெளி வீராங்கனையும் என்று எதிர்பார்ப்பை ஊட்டியுள்ளது.

வானொலி நிகழ்ச்யில் நாசா அதிகாரி:
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன், வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டார்.

உண்மையை போட்டு உடைத்த நாசா:
அதில், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது குறித்து உரையாடிய அவர், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

பெண்களின் பங்கு:
மேலும், நாசாவின் எதிர்கால செயல்திட்டங்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெண்களை வைத்து நாசா புரட்சி:
அமெரிக்கா அனைத்து துறைகளிலும் பெண்களுக்கும் இடம் ஒதுக்கியும் பெரும் புரட்சி செய்து வருகின்றது. அனைத்து பெண்களையும் சம உரிமையோடு நடத்துக்கின்றது.


Click it and Unblock the Notifications