கொரோனாவை கண்டறியும் அதிநவீன மாஸ்க்: 90 நிமிடங்கள் போதும்?
கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரசின் தாக்கம உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக இப்போது கொரோனா வைரஸ் உறுமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து ஆஸ்திரேலியாவின் 4 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மேலும் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பின்பு கொரோன பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நொய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுவாசம் மூலமாக கொரோனாவை கண்டறியும் நவீன முகக்கவசத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இந்த புதிய வகை முகக்கவசத்தை 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு முகக்கவசத்தில் உள்ள பட்டனை அழுத்தினால் 90 நிமிடங்களில் சுவாசத்தின் மூலமாக கொரோனாவை கண்டறிவதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த நவீன முகக்கவசத்தில் புகுத்தப்பட்டுள்ள சென்சார் மூலமாக எளிதில் கொரோனாவை கண்டறிய முடியும் என்று கூறிகின்றனர் விஞ்ஞானிகள். அதேபோல் இந்த வகை முகக்கவசம் குறைந்த செலவில் கொரோனாவை வேகமாகக் கண்டறியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கொரோனா பாதிப்பு பல நாட்கள் சுமார் 4 லட்சத்தை தாண்டியது. ஆனால் தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications