32.கிமீ தள்ளி இருந்தும் ரோபோ ஆபரேஷன்: அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா.!
இந்திய மருத்துவர் ஒருவர் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அப்பால் இருந்து, டெலி ரோபோவை பயன்படுத்தி, ஒருவருக்கு ஆபரேஷன் செய்து அசத்தியுள்ளார்.
இந்திய மருத்துவர் ஒருவர் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து, டெலி ரோபோவை பயன்படுத்தி, ஒருவருக்கு ஆபரேஷன் செய்து அசத்தியுள்ளார்.
இதய சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் இருந்து ரோபோ மூலம் முதல் முறையாக சிகிச்சை அளித்தது மருத்துவ வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ துறையிலும், ரோபோக்கள் தற்போது நுழைந்துள்ளதால், பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தும் இனி ரோபோக்களை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வதால், போக்குவரத்து நெரிசலில் மருத்துவர்கள் சிக்கிக்கொண்டாலும் இனி உயிரிழப்பு தடுக்கப்படும் என்று நம்பப்படுகின்றது.

ரோபோக்கள்:
மனித வேலையை சுபலமாக முடிக்கவும், நேரத்தை மிச்சமாக்கவும் தற்போது உலகம் முழுக்க ரோபோக்கள் வந்து விட்டன.

ரோபோக்கள் பயன்படும் துறை:
ரோபோக்கள் இன்று உணவு, வீட்டு வேலை, தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கூட வந்து விட்டன.

ஏஐ ரோபோக்கள் பெருகி விட்டன:
இன்று ஏஐ ரோபோக்கள் ( ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ட்) உலகம் முழுக்க பெருகி விட்டன. இதனால் அனைத்து வேலைகளையும் மனிதர்கள் நினைப்பதை காட்டிலும் ரோபோக்கள் மிக எளிதாகவும் துல்லியமாகவும் செய்து முடித்து விடுகின்றன.

டெலி ரோபோட்டிக்ஸ்:
டெலி ரோபோட்டிக் பயன்பாடானது மருத்துவ துறையில் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதற்கு அதிவேக இணைய சேவை இருந்தால் மருத்துவர் நீண்ட தூரத்தில் இருந்தாலும், இதன் மூலம் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

மாரடைப்புக்கு சிகிச்சை:
குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த நோயாளி சில நாட்களுக்கு முன் மாரடைப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
டெலிரோபோட் மூலம் சிகிச்சை:
கடந்த புதன் கிழமை 32. கி.மீ அப்பால் மருத்துவர் இருந்த போதும், அதிவேக இணைய தள சேவையை பயன்படுத்தி டெலி ரோபோட்டை கொண்டு நோயாளிக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்யப்பட்டது.

மருத்துவர் கூறுகையில்:
அகமதாபாத் அபெக்ஸ் இருதய நிறுவன தலைமை இதய அறுவகை சிக்சை நிபுணர் தேஜஸ் பட்டேல். சிகிச்சையளித்தார். நீண்ட தூரத்தில் இருந்தாலும் இந்த டெலிரோபை கொண்டு சிக்சையளிக்க முடியும். என்றார்.

அமெரிக்காவுக்கு பிறகு:
அமெரிக்காவுக்கு பிறகு குஜராத்தில் தான் அதிகம் டெலி ரோபோக்கள் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன.

கிராமப்புறங்களுக்கு உதவும்:
கிராமப்புறங்களுக்கு விரிவான மருத்துவ சேவையை இந்த டெலிரோபோட் மூலம் அளிக்க முடியும் என்று குஜராத் முதல்வர் விஜய் ருபானி கூறியுள்ளார். மேலும், இதற்கு பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதனை:
இதய சிக்சைக்காக நீண்ட தூரத்தில் இருந்து ரோபோட் மூலம் முதல் முறையாக சிகிச்சையளித்தது. மருத்துவ உலகில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது இந்தியா.


Click it and Unblock the Notifications