கருவிழியில் 500 ஓட்டை; மிரண்டு போன மருத்துவர்கள்! பின்னணி என்ன?
அடுத்த மேட்டரை கேளுங்கள். அதே ஆய்வின் படி 18 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 86 முறையாவது தங்களது ஸ்மார்ட்போனை எடுத்து பார்த்து விடுகிறார்கள் என்கிறது
ஒரு ஆய்வின் படி, ஒரு சராசரி ஸ்மார்ட்போன் பயனாளர் ஒரு நாளைக்கு சுமார் நாற்பத்தி ஏழு முறையாவது அவரின் ஸ்மார்ட்போனை எடுத்து பார்க்கிறார். இதற்கே ஷாக் ஆனால் எப்படி? அடுத்த மேட்டரை கேளுங்கள். அதே ஆய்வின் படி 18 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 86 முறையாவது தங்களது ஸ்மார்ட்போனை எடுத்து பார்த்து விடுகிறார்கள் என்கிறது

இந்த ஆய்வானது நாம் நமது தொலைபேசிகளுக்கு அடிமையாகிவிட்டோம் என்பதை எடுத்து கூறுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மேலும் இந்த ஆய்வின் படி, தூங்கி எழுந்து கண் விழித்து கொள்ளும் நேரத்திலும் மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் நாம் அதிகமாக ஸ்மார்ட்போனை கையாள்கிறோம்.

கட்டாயப்படுத்தும் கட்டுரையும் இது அல்ல!
அழைப்பு, டெக்ஸ்ட் மெசேஜ், படிப்பது, பொழுதுபோக்கு பார்வை மற்றும் பிரவுசிங் செய்தல் என பல விடயங்களுக்கு உதவும் ஸ்மார்ட்போனை நம்மால் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது, நாம் புறக்கணிக்க போவதும், அதை செய்யும் படி, கட்டாயப்படுத்தும் கட்டுரையும் இது அல்ல! இது ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் பிரைட்னஸ் பற்றிய ஒரு கட்டுரை!

அங்குதான் ஆரம்பிக்கிறது சிக்கல்!
நம்மில் எத்தனை பேர் ஆட்டோமேட்டிக் ஸ்க்ரீன் பிரைட்னஸ் பயன்முறையை எனேபிள் செய்து வைத்துள்ளோம். நூற்றுக்கு பத்து பேர் கூற இருக்க ,மாட்டோம். அங்குதான் ஆரம்பிக்கிறது சிக்கல். பெரும்பாலும், நாம் நினைப்பதை விட மிக அதிக ஸ்க்ரீன் பிரைட்னஸையே நாம் வைத்து இருப்போம். மறுகையில் அதிக நேரம் பயன்படுத்துகிறோம்.

இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால்?
பகல் நேரம் என்றால் கூட பரவாயில்லை இரவு நேரத்திலும் கூட அதிக பிரைட்னஸ் வைத்திருக்கும்போது விளைவு மோசமடைகிறது. இதுவரை நீங்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சென்னின் கதையை அறிந்த பின், நீங்கள் உங்கள் "ஸ்க்ரீன் பிரைட்னஸை பற்றி" மறுபரிசீலனை செய்யலாம்.

மிகவும் மோசமான நிலைமை!
தொடர்ந்து இரண்டு வருடங்களாக, முழுமையான ஸ்க்ரீன் பிரைட்னஸ் எனேபிள் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்திய சென்னின் கண்கள் தற்போது குலைந்து போய் உள்ளன. ஆம், ஒரு நாள் அவளுடைய கண்கள் மிகவும் மோசமான நிலைமை ஒன்றை சந்திப்பதை அவர் உணர்கிறார். உடனே அவர்ஒரு கண் மருத்துவரிடம் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

விழி வெண்படலத்தில் ஓட்டைகள் உருவாகி உள்ளது!
அவரைப் கண்களை பரிசோதனை செய்த மருத்துவர் அதிர்ந்து போய் உள்ளார். ஆம் பரிசோதனையில் சென்னின் கண்களில் சுமார் 500 துளைகள் வரை இருப்பதாக அவர் கண்டுபிடித்தார். பின் அதற்கான காரணம் என்னவென்று அறியும் போது, அதிர்ச்சி இரட்டிப்பானது. நீங்கள் நினைப்பது சரி தான், ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் பிரைட்னஸை முழு பிரகாசத்துடன் வைத்து பயன்படுத்தி காரணத்தினால் தான் சென்னின் விழி வெண்படலத்தில் ஓட்டைகள் உருவாகி உள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம்!
600 க்கும் மேற்பட்ட லுமென்ஸை (இது பிரகாசத்தின் நிலையை குறிக்கும் அளவீடு ஆகும்) தான் கண்கள் மீது சென் வெளிப்படுத்தி கொண்டதால் வந்த வினையே இந்த ஓட்டைகள் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். மிரர் பத்திரிக்கையின் படி, 600 லுமன்ஸை விட பிரகாசமான எதையும் நீங்கள் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் பார்ப்பதும், உங்கள் கண்களை ஒரு நுண்ணலைக்குள் (மைக்ரோ வேவ்) வைப்பதும் ஒன்று தான்.

இன்று ஒரு பாடத்தை கற்றுள்ளோம்!
ஆக இந்த கட்டுரையின் வழியாக மட்டும் சென்னின் கதை வழியாக நாம் இன்று ஒரு பாடத்தை கற்றுள்ளோம். அதாவது மின்னணு பொருட்களுடன் (குறிப்பாக ஸ்மார்ட்போன்) மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் இரவு நேரங்களில் மற்றும் இருட்டான இடங்களில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது (மடிக்கணினிகளும் கூட) அதன் பிரைட்னஸ் மீது கவனம் செலுத்த விடும்.

நாமும் புரிந்து கொள்வோமா?
நம்மில் சிலர் ஒரு சீரான ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கையில் எடுக்க தொடங்கி விட்டனர். அவர்கள் பூமியுடனும் அதன் வாசிகளிடமும் அதிக நேரத்தை செலவு செய்ய விரும்புகிறார்கள். அதாவது நண்பர்கள் உடனும், குடும்பத்தினர் உடனும் அமர்வதும், பேசுவதும் முக்கியம் என்பதை உணர்ந்து உள்ளனர். அந்த முக்கியத்துவத்தை நாமும் புரிந்து கொள்வோமா?

இவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!
பிரேசிலில் உள்ள ரியாச்சோ பிஃரியோ நகரில் வசிக்கும் லூசியா பினஹெரியோவை மருத்துவமனைக்கு "மிக விரைவாக" கொண்டு சென்றும் கூட, அவளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
அவருக்கு என்ன நேர்ந்தது.? அவர் எப்படி இறந்தார்.? என்பதை அறிந்தபின்னர் ஸ்மார்ட்போனின் மீதான அச்சமும், முக்கியமாக ஹெட்செட் மீதான மரண பயம் தொற்றிகொள்கிறது என்றே கூறவேண்டும்.

விபரீதமான முறையில் பலி.!
ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் ஏற்றும்போது அதை பயன்படுத்துவதே தவறு என்று பரிந்துரைக்கும் நிலைப்பாட்டில், தனது மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டே அதை பயன்படுத்தியது மட்டுமின்று அதனோடு இணைக்கப்பட்ட ஹெட்போனை காதுகளுக்குள் பொருத்தியிருந்த மாணவி ஒருவர், மிகவும் விபரீதமான முறையில் பலியாகியுள்ளார்.

விசாரணையில்.!
அவர் மீது மின்சாரம் பாய்ந்தது மட்டுமின்றி காதுகளில் அணிந்திருந்த ஹெட்போன் உருகிய நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சார்ஜரில் செருகப்பட்டிருந்த அவரின் மொபைல் ஒரு "பெரிய அளவிலான மின்சாரம்" மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காதுகளில் ஹெட்ஃபோன்கள்.!
அவரின் பாட்டி அளித்த தகவலின்படி, அவர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடந்துள்ள போதும் அவரின் காதுகளில் ஹெட்ஃபோன்கள் அப்படியே இருந்துள்ளது.

உருக்குலைவு.!
இதிலிருந்து அவர் தனது செல்போனை சார்ஜ் செய்துகொண்டே பயன்படுத்தியதால் ஏற்பட்ட மின்சார தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட மொபைல் மற்றும் ஹெட்செட் உருக்குலைவு ஆகிய காரணங்களினால் மரணித்துல்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு.!
"மின் அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு தான், லூசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று மருத்துவ பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் மழை எதுவும் பெய்யவில்லை, ஆனால் மின்னல் வெட்டுகள் இருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications