நார்வே-ல் விளைநிலத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட வைகிங் கப்பல்!
வைகிங் கப்பலுக்கு போரில் இறப்பதை விட வேறு பெரிய மரியாதை எதுவும் இல்லை. தட்டையான இந்த பூமியிலிருந்து நார்ஸ் புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒடின் கடவுளால் ஆளப்படுகிற அஸ்கார்டில் அமைந்துள்ள ஒரு கம்பீரமான, பிரம்மாண்டமான வல்ஹல்லா-ஐ நோக்கி தொடங்கும் பயணத்தில் அங்கு ஒரு நித்திய விருந்து காத்திருக்கும்.

ஆராய்ச்சியாளர் நட் பாஷே
"அவர்கள் ஒவ்வொரு நாளும் சண்டையிடவும், விருந்து வைத்து கொண்டாடவும் முடியும்.அடுத்த நாள் அதை மீண்டும் செய்யவேண்டும் " என்கிறார் கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நட் பாஷே. ஆனால் அவர்கள் அங்கு செல்ல ஒரு கப்பல் தேவைப்பட்டது. தலைவர்கள் மற்றும் மன்னர்கள், நீண்ட கப்பல்களில் வாள்கள் மற்றும் நகைகளுடன் அடக்கம் செய்யப்பட்டனர். அவற்றின் உயரத்தை குறிக்கும் அளவிலான மண் மேடுகளில் புதைக்கப்பட்டனர் என பாஷே கூறுகிறார்.
பெரிய கப்பல் மற்றும் மண் மேடு என்பது மிகவும் முக்கியமான அடக்கம் ஆகும்.

நார்வே தீவில்
தரையில் ஊடுருவி வரும் ரேடாரைப் பயன்படுத்தும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கு நார்வே தீவில் செதுக்கப்பட்ட ஒரு பெரிய மேட்டைக் கண்டுபிடித்தனர் . 55 அடி வரை நீளமுள்ள ஒரு "பெரிய" கப்பலின் எச்சங்களுடன் காணப்பட்ட அந்த கண்டுபிடிப்பு, இக்கப்பல்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி பயமுறுத்தும் சுறுசுறுப்பான கப்பல்களாக உருவாகின என்பதன் கதையை கூறும் என்கிறார் பாஷே

வைக்கிங் போர்கள்
எடோய் தீவில் கண்டறியப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, கலாச்சார பாரம்பரிய ஆராய்ச்சி நிறுவனத்தால் நவம்பர் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது . அங்கு தான் பாஷே ஒரு தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
வைக்கிங் போர்கள் உட்பட செல்வ செழிப்பான வரலாற்று அமைப்பிற்காக ஏற்கனவே அறியப்பட்ட இந்த பகுதியில் ஆராய்ச்சி செய்ய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஸ்மோலா நகராட்சி மற்றும் மோர் மற்றும் ரோம்ஸ்டால் மாநிலங்களுடன் கூட்டுசேர்ந்தனர்.

ஆராய்ச்சியாளர்கள்
செப்டம்பர் மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வல முடித்திருந்த நிலையில், அங்கிருந்த தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு உழவர் வயலில் விரைவாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
நிலத்தை ஊடுருவி சென்று ஆராயும் ஜியோராடார் வாகனம் ஒரு காலத்தில் 60 அடி விட்டம் கொண்ட ஒரு புதைகுழியின் உள்ளே இருந்த ஒரு கப்பலின் எச்சங்களை வெளிப்படுத்தியது. ஆனால் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற உழவுகளால் அது சிதைந்ததாக கூறுகிறார் பாஷே.

தெளிவாக இல்லை
அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்கு முன்பு கப்பல் எவ்வளவு பகுதிகள் உள்ளது என்பது தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் கப்பலின் முதுகெலும்பான 42-அடி கீல், பலகையை கண்டறிந்தனர். ஆனால் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர் ஏதேனும் செல்வங்கள் அல்லது ஆயுதங்களுடன் புதைக்கப்பட்டாரா என்பது தெளிவாக இல்லை என்கிறார் பாஷே.

கலைப்பொருட்கள்
கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதைக்கப்பட்ட கப்பலில் இருந்து மரம் சிதைந்துபோய் கறுப்பு நிறத்தை மட்டும் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு கப்பலில் மரமும் இல்லை, இருப்பினும் ஆணிகளின் வெளிப்புறம் மூலம் அதை அடையாளம் காண உதவியது என்றுபாஷே கூறினார், எனவே அதிக ஆணிகள் அல்லது பிற கண்டுபிடிப்புகளை அவர் நம்புகிறார்.
இந்த கப்பலைப் போன்ற பெரிய மாசற்ற சில கலைப்பொருட்கள் கொண்ட ஒரு சகாப்தத்தைப் புரிந்துகொள்ள எதுவும் உதவும் என்கிறார் பாஷே.

நோர்வேயில் மூன்று நன்கு பாதுகாக்கப்பட்ட வைக்கிங் கப்பல்கள் மட்டுமே உள்ளன. இவை அனைத்தும் ஒஸ்லோவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








