Just In
- 37 min ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 1 hr ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 1 hr ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 3 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ராவணனின் அதிரவிட்ட 24 நவீன விமானம்- வெளிப்படுத்திய ஆய்வாளர்.!
இதை பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளில் வெளிநாட்டு ஆய்வாளர்களும் உறுதிபடுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராவணன் பயன்படுத்தி 24 அதி நவீன விமானங்கள் மற்றும் விமான தளங்கள் பற்றி ஆய்வாளர் ஒருவர் விளக்கி கூற
ராமாயண காலத்தை நாம் அனைவரும் கற்பனை கதையாக எண்ணி வந்தோம். ஆனால் இன்று அதில் இருந்து வெளிப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் உலகையே அதிர விட்டுள்ளது.
இதை வைத்து பார்கையில், ராமயாணத்தில் பல்வேறு அணு ஆயுதங்கள், தொழில் நுட்பங்களும், பிரம்மா அஸ்திரம் எனப்படும் அணு குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளில் வெளிநாட்டு ஆய்வாளர்களும் உறுதிபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராவணன் பயன்படுத்தி 24 அதி நவீன விமானங்கள் மற்றும் விமான தளங்கள் பற்றி ஆய்வாளர் ஒருவர் விளக்கி கூறியுள்ளார்.
ராவணன்:
ராவணன் பத்து தலைகளுடன் இருப்பதாவே சித்திரிகரிக்கப்பட்டுள்ளது. பத்து தலைகளும் 10 துறைகளில் ராவணன் சிறந்து விளங்கியதாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் அரசியல், இசை, போர் கலை, தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள், ஆளுமை உள்ளிட்டவைகள் அடங்குகின்றன.
ராவணனுக்கு 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் இதையே சிறப்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் ராவணன் இலங்கை சேர்ந்த தமிழ் மன்னாக இருக்கின்றார். ராவணன் ஆட்சி காலத்தில் இலங்கை பொற்காலமாக இருந்துள்ளது.
சிகிரியா மலை:
இங்கை சிகிரியா மலைத் தொடர் மீது ராவணன் அமைத்து இருந்த விமான தளங்கள் இருந்தத்திற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதை பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.
புஷ்பக ரக விமானம் உள்ளிட்ட பல்வேறு விமான தளங்களை ராவணன் பயன்படுத்தியுள்ளார். மேலும், அணு ஆயுதங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அறிவியல் மாநாடு:
இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடக்கும் இந்த நான்கு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வியாழன்று தொடங்கி வைத்தார்.
அதில் பங்கேற்ற ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கு முந்தையது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்று பேசியுள்ளார்.
ஏவுகணை தொழில்நுட்பம்:
ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் மூலமாக பிறந்தவர்கள் கெளரவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் அவர் பேசியுள்ளார்.
ராமரின் அஸ்திரங்கள், சாஸ்திரங்கள்:
ராமர் அஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூக்கத்தை பயன்படுத்தினார். இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும் என்று ராவ் கூறி உள்ளார்.
"இலக்கை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு புதிதல்ல என்பதை இவை உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை இருந்திருப்பது தெரிகிறது,"
ராவணனிடம் 24 வகை விமானங்கள்:
மேலும் அவர், ராவணனிடம், புஷ்பக விமானம் மட்டும் இல்லை. அவரிடம் பல்வேறு அளவு மற்றும் திறனில் 24 விதமான விமானங்கள் இருந்ததாக ராமாயணம் கூறுகிறது என்று விவரித்துள்ளார். அவரிடம் இலங்கையில் ஏராளமான விமானங்கள் இருந்ததாகவும் கூறி உள்ளார்.
மச்ச அவதாரம்:
உயிரின் தோற்றம் நீரில் தொடங்கியதாக டார்வின் கூறுகிறார். விஷ்ணுவின் முதல் அவதாரமும் நீரில்தான் தொடங்கி உள்ளது. அதாவது மச்ச அவதாரம் என்று பரிணாம கோட்பாட்டை விஷ்ணுவுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.
சோதனை குழாய் குழந்தைகள்:
மகாபாரதத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பேசிய அவர், "காந்தாரிக்கு எப்படி நூறு பிள்ளைகள் இருக்க முடியுமென அனைவரும் வியந்தார்கள். இதனை ஒருவரும் நம்பவில்லை. ஆனால், இப்போது சோதனை குழாய் குறித்து பேசுகிறோம். மகாபாரதத்திலே இது குறித்து உள்ளது. கருத்தரித்த நூறு முட்டைகள் நூறு பானைகளில் போடப்பட்டதாக உள்ளது." என்று பேசி உள்ளார்.
1000 ஆண்டுகளுக்கு முன் சாத்தியம்:
நூறு கெளரவர்களும் ஒரு தாயிடமிருந்து பிறந்தவர்கள். இவை சோதனை குழாய் மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியால் சாத்தியமானது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுதான் இந்நாட்டின் அறிவியல் என்று பேசி உள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470