இலக்கை துல்லியமாக தாக்கும் தேஜாஸ்: சீனா-பாகிஸ்தானுக்கு கிடுகிடுப்பு.!
இந்நிலையில் தற்போது உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களையும் ராணுவத்தில் இணைத்து வருகின்றது. விமாப்படை இந்தியா மேம்படுத்தி வருவதால், சீனா-பாகிஸ்தான் கிடுகிடுத்து போய் உள்ளன.
இந்தியா தனது விமானப்படை அதி நவீனத்தில் மாற்றி அமைத்து வருகின்றது. மேலும், அதில் முப்படைகளையும் மும்முரமாக மாற்றி அமைத்து வருகின்றது.
இதில் ராணுவத்தில் புதிய தொழில்நுட்பத்திலான போர் தளவாடங்களையும் வாங்கி குவித்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களையும் ராணுவத்தில் இணைத்து வருகின்றது. விமாப்படை இந்தியா மேம்படுத்தி வருவதால், சீனா-பாகிஸ்தான் கிடுகிடுத்து போய் உள்ளன.
மேலும், இந்தியா தனது விமானப்படையில் வரும் மார்ச் மாத்திற்குள் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்களை இணைத்துக் கொள்கின்றது.

இந்திய விமாப்படை:
இந்தியா விமானப்படையை துரிதமாக நவீனமயமாக்கி வருகின்றது. ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் விமானப்படைக்கு தேவையான அணு ஆயுதங்கள், ஹெலிகாப்படர்கள், போர் விமானங்கள் என வாங்கி வருகின்றது.
மேலும், பழைய விமானங்களையும் புதுப்பித்து வருகின்றது.

ரேடார் தொழில்நுட்பம்:
இந்தியா விமானப்படைக்கு ரேடார் தொழில்நுட்பம் உட்பட புகுத்தப்பட்டு வருகின்றது. உள்நாட்டில் கட்டமைப்பு மற்றும் மேம்படுத்துப்படும் போர் விமானங்களுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

தேஜாஸ் போர் விமானம்:
பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டில்ஸ் லிமிடெட், தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நடுவானிலேயே எரிபொருள் நிரப்புவது, இலக்குகள் மீது துல்லியமாக குண்டுகள் வீசுவது, அதிநவீன ரேடார் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டது தேஜாஸ் போர் விமானம்.

சேர்க்க ஒப்புதல்:
தேஜாஸ் எம்கே1 என்ற இலகு ரக போர் விமானங்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்திய விமானப்படையில் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.

12 விமானம் சேர்ப்பு:
ஆண்டுக்கு 8 விமானங்கள் என்பதற்குப் பதில் 16 விமானங்களை தயாரிக்க வசதியாக 1381 கோடி ரூபாயை 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கியது. தற்போது இயக்குவதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்ட்ட 16 விமானங்களில் 12 விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய 4 விமானங்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் இணைக்கப்படும் என்று பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ்பாம்ரே தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்-சீனா:
இந்தியா தனது படையில் அதிவேகமாக நவீன விமானங்கள் மற்றும் வெளிநாட்டு போர் விமானங்கள், தொழில்நுட்பத்தினால ஆயுதங்களையும் புகுத்தி வருகின்றது. இதனால் பாகிஸ்தான், சீனாவுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








