சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.!
அக்னி 2 ஏவுகணை சோதனை நேற்று இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் நகரின் கடலோரத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக 2ஆயிரம் கி.மீ தொலைவு வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல் முறையாக இந்த ஏவுகணை சோதனை இரவு நேரத்தில் நடைபெற்று வெற்றியும் பெற்றிருக்கிறதுஎன்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கிறது.

1.3 ஆயிரம் கி.மீ
குறிப்பாக அக்னி ஏவுகணைகளின் வரிசையில் 700கி.மீ தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி 1.3ஆயிரம் கி.மீ தொலைவு வரை போய் தாக்கும் அக்னி 3 ஆகியவையும் சோதனை செய்யப்பட்டுள்ளன.

அதன்பின்பு நீண்ட தொலைவு சென்று தாக்கும் அக்னி 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகளும் அக்னி வரிசையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 1999-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி முதல் முறையாக அக்னி 2ரக ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. பின்பு 2010-ம் ஆண்டு மே 17-ம் தேதியும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதியும் அக்னி ஏவுகணைகள் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சோதனை செய்யப்பட்ட அக்னி 2 ஏவுகணை இரவில் தாக்குதல் திறனை சோதிப்பதற்காக சோதனை செய்யப்பட்டுள்ளது, அத்துடன் புதிய மேம்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் இந்த அக்னி 2 ஏவுகணை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இப்போது செய்யப்பட்ட இந்த சோதனை Strategic Forces Command எனப்படும் எஸ்எப்சி படை பிரிவு மூலம் இந்த சோதனை செய்யப்பட்டது. இதில் டிஆர்டிஓ படையினர் இந்த சோதனையை உடன் இருந்து கவனித்து இருக்கிறார்கள்.

மேலும் இப்போது சோதனை செய்யப்பட்ட அக்னி 2 வகை ஏவுகணை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில்உள்ள டார்க்கெட்டை தக்க கூடிய வகையான ஏவுகணைகள் ஆகும். குறிப்பாக 2000மீட்டர் தூரத்தில் உள்ளஇலக்குகளை அதிரடியாக தாக்கும்.


Click it and Unblock the Notifications