மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஓடம் தயார்-பிற நாடுகள் ஆச்சரியம்.!
இந்தியா சார்பில் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றது. இஸ்ரோம் இதற்கான அடுத்த கட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.
உலக அளவில் பல்வேறு நாடுகளும் மனிதர்களை விண்வெளி ஆய்வுக்கு அனுப்பி வருகின்றனர்.
செவ்வாய், சந்திரன் உள்ளிட்ட கிரகங்களில் ஏராளமான தனிமங்கள் இருக்கின்றன. இதை எடுத்து வந்து மனித குலத்திற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பணிக்கு பயன்படுத்த பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான ஆயத்த பணிகளும் மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு வருகின்றது.

இன்று மனிதர்கள் வாழ்கை தரம் மற்றும் நவீன வாழ்கையாக இருப்பதால், மனிதன் பூமியையும் தாண்டி வேற்று கிரகங்களும் சுற்றுலா செல்லவும் தயாராக இருக்கின்றான்.
வேற்று கிரகங்களுக்கு செல்லும் பணிகளில் தயார் துறைகளும் முதலீடு இதற்கான பணிகளிலும் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், வேற்று கிரகங்களுக்கு சென்று வர மனிதர்களுக்காக பிரமாண்ட விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுகன்யான் திட்டம்:
பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினந்தன்று உறங்கிய யானை எழுந்து விட்டது. இந்தியா சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை வரைவில் அனுப்புவோம் என்று பேசியிருந்தார். இதற்கான திட்டமிடப்பட்டது.

3 மனிதர்கள்:
இந்தியா சார்பில் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றது. இஸ்ரோம் இதற்கான அடுத்த கட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.

10,000 கோடி ஒதுக்கீடு:
இந்தியா சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 2021ம் ஆண்டிற்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் என்றும் இஸ்ரோவும் உறுதி கூறியுள்ளது. இதற்காக அடுத்தடுத்து செயற்கைகோள்களை அனுப்பும் பணிகளும் நடந்து வருகின்றது.
விண்வெளி ஓடம் தயார்:
ஸ்பேஸ் எக்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க் தமது டுவிட்டர் பக்கத்தில், புதிய ராக்கெட்டின் படத்தை வெளியிட்டுள்ளார். செவ்வாய் மற்றும் நிலவுக்கு மனிதர்கள் கொண்டு சென்று மீண்டும் பூமிக்கே திரும்பும் வகையில் ஸ்டார்ஷிப் என்ற அந்த விண்வெளி ஓடம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக எலன் மஸ்க் கூறியுள்ளார்.
சோதனை ஆயத்தம்:
விண்வெளி ஓடத்தின் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், இது அசல் புகைப்படம் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விண்வெளிப் பயணத்துக்கான ராக்கெட்டையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சோதித்துப் பார்க்கவுள்ளது.

பேஸ்எக்ஸ் நிறுவனம்:
பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலத்தை பார்த்து மற்ற நாடுகள் ஆச்சரியமடைந்து வருகின்றன. எலன் மஸ்க் கொண்டு வரும் புது கண்டுபிடிப்பு பாணிகளும் பெறும் வரவேற்பை பெற்று வருகின்றன குறிப்பிட தக்கது.

இஸ்ரோ சவால்:
இஸ்ரோவும் எலன் மஸ்க் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளுக்கும், வடிவமைப்புகளுக்கும் சவால் விடும் வகையில், கடந்த சில தினங்களுக்கு வாரங்களுக்கு முன் தனது ராக்கெட்டை செங்குத்தாக நிறுத்தியது குறிப்பிட தக்கது.

வடிவமைப்பு:
இஸ்ரோ நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்திற்கு நிகராக தனது கண்டுபிடிப்பை அரங்கேற்றும் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications