2நிமிடத்தில் காருக்கு இன்சூரன்ஸ் பெற்று தரும் ஏடிஏ தொழில்நுட்பம்.!
பிறகு, சரிசெய்யப்பட்டாலும், இதற்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், நாம் சரியான முறையில் இன்சூரன்ஸ் செலுத்தியிருந்தாலும், நமது கைக்கு அந்த தொகை வந்து சேருவது கால தாம
இன்றைய காலகட்டத்தில் நமது கார் மற்றும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் சிறிய அல்லது பெரிய சேதம் அடைந்தாலும், காரை பாராமரிக்க ஒர்ஷாப்பிக்கு சென்று விடுவோம்.

பிறகு, சரிசெய்யப்பட்டாலும், இதற்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், நாம் சரியான முறையில் இன்சூரன்ஸ் செலுத்தியிருந்தாலும், நமது கைக்கு அந்த தொகை வந்து சேருவது கால தாமதம் ஏற்படும்.
இந்நிலையில், இதற்கு தீர்வாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏடிஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக சேதமதிப்பை கணக்கிட்டு உடனடியாக இன்சூரன்ஸ் தொகையை வழங்குகின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பழுது நிக்க அதிக நேரம்:
நமது கார்களில் விபத்து மற்றும் சேதடைந்தால் பழுது அடைந்தால், அதை சீராக்குவது கடினமான முறைதான். நாம் இழப்பீடு தொகை பெற இன்சூரன்ஸ் நிறுவனங்களை அணுக வேண்டியது இருக்கும். பழுது சரிசெய்யப்பட்டாலும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு தொகை பெறுவது கடினமாக இருந்தது.

கை முறையில் இன்சூரன்ஸ் நிறுவனம்:
இதுநாள் வரை சேதமடைந்த காருகளுக்கும் வானங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கை முறையில் (மெனுவல்) செயல்படுத்தி வந்தன. தற்போது, கம்பியூட்டர் விஷன், டி-பிளானிங் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்த துவங்கியுள்ளன.

நீஷ் நிறுவனம்:
ஹைதராபாத்தை சேர்ந்த நீஷ் ஏஏ என்ற நிறுவனம் தற்போது, ஏடிஏ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கியுள்ளது. இதன் மூலம் கார் எந்த பகுதியில் சேதமடைந்துள்ளது. அதற்கு எவ்வளவு செலவாகும். மேலும் எந்த பகுதியை மாற்ற வேண்டும் என்று கணித்து விடும்.

தொழில்நுட்பம் உதவும் முறை:
ஏடிஏ தொழில்நுட்பம் இருப்பதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் நடைமுறையை 2 நிமிடத்தில் எளிதாக்கி விடும். ஏடிஏவில் காரின் சேமடைந்த பகுதியை நாம் பதிவேற்றம் செய்தால், காரின் எதை மாற்ற வேண்டும். செலவு எவ்வளவு பிடிக்கும் என்று கூறி விடும்.

இம்மேஜ் ரெக்ககனைசிங் பயன்பாடு:
ஏடிஏ-வில் இம்மேஜ் ரெக்ககனைசிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், ஆட்கள், இடங்கள், பொருட்கள் ஆகியவற்றை இந்த கணினிகள் துல்லியமாக கணித்து விடுகின்றன.
இதில் உள்ள படங்களை தரவுகளாக மாற்றி விடும். ஒரு வாகனம் சேதமடைந்தால், அதில் அதில் ஆயிரக்கணக்கில் உதிரி பாகங்கள் இருக்கும் இதை கண்டறிவதே சவால் ஆன விஷயம் தான்.

மேற்பார்வையில்லாமல் கற்றல் முறை:
20 அல்லது 30 படங்களை ஏடிஏவில் காட்டும் போது, அது தானாவே ஒரே புகைப்படங்களாக மாறிவிடும். இதில் விளக்குகள் ஒரு பகுதியாகவும், பென்டஸ் ஒரு ஓரு பகுதியாக மாற்றி விடுகின்றது.

துல்லியத் தன்மை:
இதன் மூலம் செலவுகள் 60 சதவீதம் குறையும் என்று நீஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த பாகங்களை கண்டறிவது 90%, மாறப்பட வேண்டியது 80% மொத்தமாக துல்லியமாக என 70 % இந்த தொழில்நுட்பம் காட்டி விடும். மேலும், மேலீட்டு தரவுகளை அதிகம் உள்ளீடு செய்தால், அதிகம் பதிவேற்றம் செய்தால், காரை சேதத்தையும் துல்லியமாகவும் காட்டி விடும்.

ஏமாற்று வேலைகளை தடுக்கும்:
நீங்கள் சேமதடைந்த காருடன் ஒர்க் ஷாப்புக்கு அடிக்கடி சென்றால் மெக்கானிக் உடன் பழக்கம் ஏற்படலாம். காரின் இன்சூரன்ஸ் நம்பரை மட்டும் சொல்லுங்கள், இழப்பீடை நாங்கள் பெற்று தருகின்றோம் என்று போலியாகவும் இழப்பீட்டை பெற முடியும். தற்போது வந்துள்ள தொழில் நுட்பத்தால், ஏமாற்றுவேலைகள் முழுமையாக தடுக்க முடியும்.

ப்ளூட்டோ 7 நிறுவனம்:
மற்ற நிறுவனங்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இன்சூரன்ஸ் க்ளையம் செய்து வருகின்றன. தற்போது ப்ளூட்டோ 7 என்ற நிறுவனம் கூகுள் கிளவுடு (மேகக் கணினி) முறையை பயன்படுத்தி, வாகனத்தின் நம்பர் பிளேட் கணக்கிட்டு, ஆன்லைனில் இன்சூரன்ஸ் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்யு முடியும்.
மேலும், வாகனத்தில் உள்ள சேதமதிப்புகளையும் இந்த கூகுள் கிளவுடு முறையில் கணக்கிட முடியும்.

பேட்டரி ஆயில் கணிக்க:
வாகனத்தில் பேட்டரி ஆயில் முறையை கணிக்க இயந்திர உள்ளீட்டு முறையை மூலம் கணக்கிட்டு இதற்கான இன்சூரன்ஸ் முறையை கணக்கிட முடியும். இதற்கான விரைவில் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியும்.


Click it and Unblock the Notifications