இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 'தடைநீக்கம்' செய்யப்பட்ட 'ரா' செயல்பாடுகள்..!
'தடைநீக்கம்' செய்யப்பட்ட இந்தியாவின் ரா (RAW) செயல்பாடுகள் பற்றி உண்மையில் நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க அல்லது அவைகளை பற்றி அதிகம் படித்திருக்க கூட வாய்ப்பில்லை. ஏனெனில், அவைகள் எல்லாம் நம்மை பாதித்து விடாத 'நிழலில்' நமக்கு தெரிந்து விடாத வகையில் மறைமுகமாக நடத்தப்பட்டவைகளாகும்.!
இந்தியாவின் முதன்மையனான வெளிநாட்டு உளவுத்துறை நிறுவன ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (Research and Analysis Wing - RAW) ஆனது நிகழ்த்திய சில தடைநீக்கம் (அதாவது முழுக்க முழுக்க ரகசியமாய் நடத்தப்பட்டு பின்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட) செய்யப்பட்ட செயல்பாடுகள் இந்தியர்களை பொருத்தமட்டில் ஒரு காவிய கதைகள் தான் என்று சொல்ல வேண்டும்..!
அப்படியாக, இரகசிய நடவடிக்கைகளாக கடந்த காலத்தில் ரா நடத்திய இரண்டு செயல்பாடுகளைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

#1
ஆப்ரேஷன் ஸ்மைலிங் புத்தா (Operation Smiling Buddha)

#2
ஸ்மைலிங் புத்தா என்பது முழுக்க முழுக்க ரகசியமாக நடத்தப்பட வேண்டும் என்று ராவிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தியாவின் அணுசக்தித் திட்டம் ஒன்றின் பெயராகும்.

#3
அதுமட்டுமின்றி இந்தியாவிற்குள் நடக்கும் ஒரு திட்டத்திற்குள் ரா முதன்முறையாக இணைக்கப்பட்டுக் கொண்டதும் ஸ்மைலிங் புத்தாவில் தான்..!

#4
இறுதியாக 1974- ஆம் ஆண்டு மே-18 ஆம் தேதி, பொக்ரானில்15 கிலோடன் புளூட்டோனிய கருவியை வெடிக்க செய்து வெற்றிகரமாக இந்தியா தனது சோதனையை நடத்தி முடித்து..!

#5
அதனை தொடர்ந்து அணு ஆயுதத்தை தயாராக வைத்திருக்கும் உலக நாடுகளின் குழுவில் ஒரு உறுப்பினராக இந்தியா இணைந்தது.

#6
உளவுத்துறை அமைப்புகள் கொண்ட நாடுகளான அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துளிகூட தெரியாத வண்ணம், எந்த விதமான தடைகளும் இன்றி ஸ்மைலிங் புத்தா சோதனையானது ராவின் துணையுடன் நடத்தப்பட்டது.

#7
ஆப்ரேஷன் கஹுடா (Operation Kahuta)

#8
பாகிஸ்தானின் முக்கிய அணு ஆயுதங்களை ஆய்வகமான கான் ஆராய்ச்சி ஆய்வகம் ஆனது (Khan Research Laboratories - KRL) வளர்ந்து வரும் நீண்ட தூர ஏவுகணை வளர்ச்சிக்கான ஒரு மையமாகவும் இருந்தது.

#9
இந்த ஆய்வகமானது ராவல்பண்டி மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான கஹுடாவில் அமைந்திருந்தது.

#10
பாகிஸ்தான் தனது அணுசக்தி திட்ட மாதிரிகளை ஒரு முடிதிருத்தக கடையின் அருகே பகுப்பாய்வு செய்வதாக முதலில் ராவிற்கு தகவல்கள் கிடைத்தன.

#11
அதனை தொடர்ந்து பாகிஸ்தானிடம் யுரேனிய செறிவூட்டல் ஆயுதங்கள் (enrich uranium weapons) இருப்பது தெள்ளத்தெளிவாக புரிந்துக் கொள்ளப்பட்டது, அதனை தொடர்ந்து பாகிஸ்தானின் அணு ஆற்றல் நிறுவல்களை நோக்கி இந்தியாவின் ரா ஊடுருவத் தொடங்கியது.

#12
எல்லாம் இந்தியாவிற்கு சாதகமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் "உங்கள் அணு ஆயுத வளர்ச்சி பற்றி எங்களுக்கு தெரியும்" என்று பாகிஸ்தானிடம் வார்த்தையை விடவும் உஷாராகி கொண்டது பாகிஸ்தான்.

#13
அதனை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பாகிஸ்தான் உளவுத்துறையானது கஹுடாவில் கண்காணிபில் உளவில் இருந்த அனைத்து ரா அதிகாரிகளையும், ஆதாரங்களையும் அழித்துக்கட்டியது.

#14
அன்று தொடங்கி இன்று வரையிலாக பாக்கிஸ்தான் அணுசக்தித் திட்டம் பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லாமல் கணிப்பிலேயே தான் இந்திய நிலைப்பாடு இருந்து வருகிறது என்பதும் குறிப்பிட த்தக்கது.

#15
இனி சூப்பர் பவர் நாடுகள், இந்தியாவை கண்டு அச்சம் கொள்ளட்டும்..!
சீறும் இந்தியா, இத்தனை வேகமா..!? - வாய்பிளக்கும் ஜி7 நாடுகள்..!

#16
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
புகைப்படங்கள் : கூகுள் எர்த்


Click it and Unblock the Notifications