வாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.!
வாகனங்களில் 5ம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நாடு என்ற பெருமையை சீனா தற்போது எடுத்துள்ளது.
வாகனங்களில் 5ம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நாடு என்ற பெருமையை சீனா தற்போது எடுத்துள்ளது.

சீனா வளர்ந்த நாடுகளையம் வளரும் நாடுகளையும் தூர தூக்கி வீசியுள்ளது. தொழில்நுட்பத்தாலும் வாகனங்களில் இணைத்து முன்னோடியாக சீனா தற்போது உருவெடுத்துள்ளது.

ஹூவாய் 5ஜி தொழில்நுட்பம்:
வாகனங்களில் 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்த முடியும் சீனா தற்போது நிருபித்துள்ளது. மேலும், ஹூவாய் நிறுவனம் இதை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

5ஜி வன்பொருள் பொருள் உருவாக்கம்:
எம்ஹெச் 5000 என்ற பெயர் கொண்ட 5ம் தலைமுறை வன்பொருள் உருவாக்கம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளது.

வாகனங்களை அதிவேகமாக இயக்கலாம்:
வன் பொருள் (ஹார்டுவேர்) மூலம் வாகனங்களை அதிக வேகத்திலும், சீரிய தரத்திலும் இயக்க முடியும் என ஹூவே நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் 5ஜி:
இதற்கான அறிமுக விழா கடந்த விழாயக்கிழமை ஷாங்காய் நகரில் வாகன கண்காட்சியின் போது, அறிமுகம் செய்யப்பட்டது. எதிர் காலத்தில் வாகனப் போக்குவரத்தை எளிதாக்கவும், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வும் 5ஜி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹூவாய் நிறுவனம் திட்டம்:
ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவின் முக்கயி நகரங்களான ஷாங்காய், ஷென்ஸன் மற்றும் வூஸி ஆகிய நகரங்களில் வாகனங்களை ஒன்றிணைக்க ஹூவே நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications