தூசியால் வந்த துன்பம்! செவ்வாய் கிரகத்தில் "சாகப்போகும்" NASA-வின் இன்சைட்!
நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் மற்ற உலக நாடுகளை விடவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவானது மிகவும் உன்னிப்பாகவும், மிகவும் தீவிரமாகவும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகள்
இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் இன்சைட் லேண்டர் ஆனது 4 ஆண்டுகள் பயணத் திட்டத்துடன் நிறைவு செய்யப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

மின் உற்பத்தி
அதாவது செவ்வாய் கிரகத்தில் சுமார் 4 ஆண்டுகள் ஆய்வு செய்த நாசாவின் இன்சைட் லேண்டர் தனது பயணத்தை நிறைவு செய்கிறது. குறிப்பாக லேண்டரின் சோலார் பேனல்களில் அதிக அளவு தூசி படிந்துள்ளதால் விண்கலத்தின் மின் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனால் லேண்டர் செயலிழக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் எஞ்சியிருக்கும் மின்சாரம் மற்றும் பிற கருவிகளின் உதவிகளுடன்தொடர்ந்து சிறிது காலம் இது செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தரவுகள் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும்
குறிப்பாக இந்த இன்சைட் லேண்டர் செயலிழக்க செய்வது முன்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நாசா அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது இன்சைட் லேண்டர் இதுநாள் வரை சேமித்த தரவுகள் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் என்று கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் நிலநடுக்கம்
மேலும் இன்சைட் லேண்டர் ஆனது செவ்வாய் கிரகத்தின் உட்புற அடுக்குகள், அதன் திரவ மையம், செவ்வாய் கிரகத்தின் வானிலை தரவுகள், செவ்வாய் கிரகத்தின் நிலநடுக்கம் போன்ற பல தரவுகளை சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் துவக்கத்தில்..
அதேபோல் இந்த ஆண்டில் துவக்கத்தில் இந்த லேண்டரின் ஆற்றல் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதைத் திட்டக் குழு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் பின்பு seismometer கருவியை தொடர்ந்து இயக்க நாசா லேண்டரின் அனைத்து கருவிகளையும் நிறுத்தி வைத்தது என்று கூறப்படுகிறது.

20 சதவீதம்
தற்போது லேண்டர் 20 சதவீதம் குறைவாகவே மின்உற்பத்தி செய்கிறது. இதனால் லேண்டரின் மற்ற கருவிகளை திட்டக் குழுவால் இயக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. பின்பு பேனல்களில் படிந்துள்ள அதிக தூசி இதை மேலும் மோசமடைய செய்தது. மேலும் சமீபத்தில் கூட திட்டக் குழு seismometer கருவி நிறுத்திவைத்ததாகக் கூறப்படுகிறது.

பின்பு செவ்வாய் கிரகத்தில் புயல் ஓய்ந்த பின்பு seismometer கருவி மீண்டும் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் லேண்டரில் குறைந்த அளவிலான மின்சாரம் மட்டும் இருப்பதால் சில வாரங்களுக்கு மட்டுமே செயல்படுத்த முடியும் என்று கூறினார் நாசா விஞ்ஞானி புரூஸ் பேனர்ட்.

வாய்ப்பு மிகவும் குறைவு
குறிப்பாக செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் ஒரு விண்கலத்துடன் 2 தொடர்ச்சியான தொடர்புகளை லேண்டர் தவறவிட்டால், இன்சைட் பணி முடிந்ததாக நாசா அறிவிக்கும் எனபது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் லேண்டர் பேனலில் உள்ள தூசி பலத்த காற்று வீசினால் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா என்று கேட்கப்பட்டதற்கு அத்தகைய நிகழ்வு கேள்விக்குறி, வாய்ப்பு மிகவும் குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications