சோயுஸ் விண்கலத்தில் திடீர் கோளாறு: உயிர்தப்பிய விஞ்ஞானிகள்.!
வெளியான தகவலின்படி, புகைப்படத்தில் பிடிபட்ட ஏவுகணை ஆனது ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ரஷ்யா சார்பில் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட விண்கலங்கள் சாதனை படைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் கஜகஸ்தானில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு
புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த விண்கலத்தில் பயணித்த வீரர்கள், உடனடியாக அவசர வழியில் இருந்து தனி கேப்சூல் மூலம் கீழே குதித்து அதில் இருந்த வீரர்கள் உயிர் தப்பினர்.

மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம்
இதன்பின்னர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் சிறுது காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ரஷ்யா சார்பில் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை
மேலும் இதனை தொடர்ந்து, சோதனை ரீதியாக மூன்று முறை ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது, இந்த சோதனை முயற்சி வெற்றி கிடைத்துள்ளதை தொடர்ந்து, பைக்கானுர் விண்வெளித் தளத்தில் ரஷ்யாவின் சோயுஸ் வண்கலம் புறப்படுவதற்கான
கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

கனடாவின் டேவிட்
குறிப்பாக இந்த விண்கலம் ரஷ்யாவின் ஒலேக் கோனோநென்கோ,கனடாவின் டேவிட், செயின்ட் ஜாக்குஸ் அமெரிக்காவின் மெக்கிளெயின் ஆகியோர் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக் -31
மேலும் கடந்த மாதம், ரஷ்ய போர் விமானமான மிக் -31 ஒன்றில் முன் எப்போதும் காணப்படாத ஒரு ஏவுகணை இருப்பது, புகைப்படத்தில் பதிவானது. ஆரம்பத்தில் அதுவொரு சாதாரண ஏவுகணையாக இருக்கக்கூடும் என்று எண்ணப்பட்டது, பின் சமீபத்தில் கிடைக்கபெற்றுள்ள ஒரு புரிதலின் வழியாக, அந்த ஏவுகணையின் விபரீதம் தெரிய வந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில்
வெளியான தகவலின்படி, புகைப்படத்தில் பிடிபட்ட ஏவுகணை ஆனது ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது 2022 ஆம் ஆண்டில் போர் செய்ய தயாராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க புலனாய்விற்கு கிடைத்த மூன்று உளவுத்துறை தகவல்களுமே உறுதி செய்துள்ளன.


Click it and Unblock the Notifications