அதிர்ச்சி, இது நடந்தால் பூமி அழிந்து விடுமா.??
பண்டைய காலத்தில் பூமி அழிவதற்கான காரணமாக பூமியின் காந்த புலம் மறு ஒழுங்கு செய்து கொள்ளும் போது ஏற்படும் என கூறப்பட்டு வந்தது. இவ்வாறு பூமியின் காந்த புலம் மறு ஒழுங்கு செய்து கொள்ளும் போது உலகம் முழுவதும் அழிய துவங்கி மனித இனம் அழிந்து போகும் என பண்டைய கால கோட்பாடுகளில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழைய கோட்பாடுகளின் படி உலகம் அழிவது அதிகபட்சம் சாத்தியமற்றும் என கூறுகின்றனர், எனினும் பூமியின் காந்த புலம் மறு ஒழுங்கு நிச்சயம் ஏற்பட போகின்றது என தெரிவித்துள்ளனர்.

1
சமீபத்தில் ஐரோப்பிய விண்வெலி மையம் மேற்கொண்ட ஆய்வில் பூமியின் காந்த புலம் பலவீனமடைந்து வருவது தெரியவந்துள்ளது.

2
பூமியின் காந்த புலம் பலவீனமடையும் செயல் எச்சரிக்கை செய்யும் விதமாக அமைந்துள்ளது.

3
புதிய பதிவுகளில் பூமியின் காநத் புலம் வீழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதவீதத்தில் இருப்பதும், இது முந்தைய கணிப்புகளை விட பத்து மடங்கு அதகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4
இந்த வீழ்ச்சியானது சீராகவும் இல்லை, மாறாக சில புள்ளிகள் வேகமாகவும், சில இடங்களில் காந்த புலம் வலுப்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

5
ஏற்பட இருக்கும் காந்த புலம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் வருந்தவில்லை, எனினும் சமீபத்திய குறிப்புகளில் பூமியின் காந்த புலம் மறு ஒழுங்கு செய்வது மட்டும் உறுதியாகிவிட்டது.

6
முன்னதாக பூமியின் காந்த புலம் கற்காலத்தில் மறு ஒழுங்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்சமயம் ஏற்பட இருக்கும் காந்த புலம் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவற்ற நிலையிலேயே இருக்கின்றது.

7
எனினும் காந்த புலம் மறு ஒழுங்கு ஏற்படும் போது அதிகப்படியான பாதிப்புகள் இருக்காது என்பதே ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கின்றது.

8
அதிகபட்சம் காந்தபுலமானது தற்சமயம் பயன்படுத்தும் திசைகாட்டிகளை ரீலேபிள் செய்ய நேரிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

9
ஏன் பூமியை விட்டு நாம் வெளியேற வேண்டும்..? - எலான் மஸ்க் அதிரடி..!
360 டிகிரி கோணத்தில் நமக்கு 'ஆபத்துகள்' காத்திருக்கின்றன.!!

10
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications