வெடிகுண்டை கண்டுபிடிக்க பாம்ஸ்கோடு தேவையில்லை வைபை போதும்: அட்ரா சக்க புதிய தொழில் நுட்பம்.!
வைபை கின்னல் இணைப்புகளில் வெளிப்பம் சிக்னல்களை கொண்டு இனி பள்ளி-கல்லூரி, அலுவலக, வளாகம், பேருந்து-ரயில்-விமான நிலையம் போன்ற பல்வேறு இடங்களிலும் பாம் வைத்து இருந்தாலும் இனி எளிமையாக கண்டுபிடித்து விடலா
முதலில் எல்லாம் உங்கள் வீட்டில் பாம் இருக்கின்றது. பள்ளி, கல்லூரி, ரயில்நிலையம், அலுவலகத்தில் பாம் வைத்துள்ளோம். நீ நாங்கள் கூறிய படி செய்யவிட்டால் பாம்மை வெடிக்க செய்து விடுவோம் என்று மிரட்டல் விட்டால் கூட இனி பயம் இல்லை.

பீதியை கிளப்பினாலும் பயம் இல்லை. இனி பாம் ஸ்கோடை தேடியும், போலீசாரையும் நாடி போக தேவையை இல்லை. நம்மிடம் வைபை இருந்தாலே பாம் எங்கு இருக்கின்றது என்று கண்டுபிடித்து விடலாம்.

வைபை சிக்னல் கொண்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கலாம்:
வைபை கின்னல் இணைப்புகளில் வெளிப்பம் சிக்னல்களை கொண்டு இனி பள்ளி-கல்லூரி, அலுவலக, வளாகம், பேருந்து-ரயில்-விமான நிலையம் போன்ற பல்வேறு இடங்களிலும் பாம் வைத்து இருந்தாலும் இனி எளிமையாக கண்டுபிடித்து விடலாம் என்று ரட்ஜர்ஸ்-நியூ பிரன்ஸ்விக் பல்கலைகழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பதில் பிரச்னை:
முதலில் எல்லாம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவவலங்கள், ரயில் நிலையம் என எல்லாம் இடங்களிலும் பாம் வைக்கப்பட்டிருக்கின்றா என கண்டறிய போலீசாரை வரவழைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும். முழுபாதுகாப்பு வளையம் கொண்டு வரவேண்டும். இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். மேலும் அந்த அதிகாரிகளும் பாம் இருக்கின்றதா என கண்டறிய மெட்டல் டிடெக்டரை எடுத்துக்கொண்டு அங்குமிங்கும் தேடி அழைய வேண்டும்.

அதிக பொருட் செலவு:
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பரவலாக ஸ்கேனிங் முறையே பயன்படுத்தப்படுகிறது. இது அதிக பொருள் செலலை ஏற்படுவத்துவதாக உள்ளது. மக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளன. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், பைபை சிக்னலை கொண்டு வெண்டி குண்டை கண்டறியும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கிய குழுவில் ஒருவரான நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழக பேராசிரியர் யின்யிங் சென் தெரிவித்தார்.

இதை எல்லாம் கண்டுபிடிக்கும்:
வை பை அல்லது கம்பியில்லா சிக்கனல்களை பயன்படுத்தி உலோகத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், அலுமினிய கேன்கள், மடிக்கணினிகள், பேட்டரிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றின் வடிவத்தை/ பரிமாணங்களை இனங்கண்டு, அபாயம் விளைவிக்கக்கூடிய பொருட்களை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆல்ஹலலையும் கண்டுபிடிக்கலாம்:
அதுமட்டுமில்லாமல், தண்ணீர், அமிலம், ஆல்கஹால் மற்றும் மற்ற திரவ வடிவிலான ரசாயனங்களின் அளவையும் இந்த வைபை சிக்கனல்களை கொண்டு கண்டறியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று வைபை சாதனம் போதும்:
இந்த அமைப்பை நிறுவுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆன்டெனாக்களை கொண்ட வைபை சாதனம் தேவைப்படுமென்றும், சாதனத்திலிருந்து வெளிப்பட்டு பொருட்களின் மீது பட்டு அமைப்புக்கு திரும்ப வரும் அலைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது சாத்தியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி டென்ஷன் இல்லை:
இனி பாம் இருந்தாலும் கண்டுபிடிக்க மெனக்கெடுத்து ஓட தேவையில்லை. இனி பைபை எடுத்து ஹாயா கண்டிபிடிச்சு விடலாம். இனி நம்ம ஊர் போலீஸீசும் மற்றவர்களை துன்புறத்தாமா கண்டுபிடிப்ப விடுவார்கள். இதனால் கூட்டமாக இருந்தாலும் பாம் அது பக்கத்துல தான் இருக்குனு துள்ளியமா கணக்கிட்டு எடுத்து விடுவார்கள் இனி கவலை இல்லை. டென்ஷன் இல்லை நமக்கு.


Click it and Unblock the Notifications