பிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.! பாகிஸ்தானுக்கு வழங்குகின்றது!
இந்தியாவின் பிரமோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியதை போல், சீனாவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மேலும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது ஏவுகணைகளை
ஒளியை விட வேகமாக சென்று தாக்கும் வகையில், இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு முயற்சியால் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இதன் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக சீனா தன்னிடம் இருக்கின்ற 78 ஆள்ளிலா விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்து ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பிரமோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியதை போல், சீனாவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மேலும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கும் வழங்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரமோஸ் ஏவுகணை வெற்றி:
போர் தளவாடங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஒடிசா மாநில கடற்கரையோரத்தில் கடந்த 2016ம் ஆண்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
பாலாசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து நடமாடும் லாஞ்சர் வாகனம் மூலம் இந்த ஏவு கணை செலுத்தப்பட்டதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக (டிஆர்டிஓ) தெரிவிக்கப்பட்டது. 300 கிலோ எடை கொண்ட போர் தளவாடங்களை சுமந்தபடி இலக்கை தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணையின் சோதனை மாபெரும் வெற்றியைம் அடைந்துள்ளது.

இரண்டு நிலை ஏவுகணை:
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இரு நிலைகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிலை திடமானதாகவும், இரண்டாவது நிலையில் திரவ புரோப்பலென்ட் மூலம் இயங்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவு கணை ஏற்கெனவே ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. விமானப் படையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

ராணுவத்தின் பயன்பாடு :
ஐஎன்எஸ் ராஜ்புத் போர் விமானத்தில் கடந்த 2005-ல் பிரம்மோஸின் முதல் வகை ஏவுகணை பொருத்தப்பட்டது. அந்த ஏவுகணை தற்போது ராணுவத்தின் இரு பிரிவுகளில் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இருமுறை பரிசோதனை வெற்றி:
இதற்கு முன் 2014, ஜூன் மற்றும் 2015, பிப்ரவரியில் இரு முறை பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தெரிவித்தார்.

பிரோமேஸ்க்கு போட்டியாக சீனா:
தற்போது இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைக்காக போட்டியாக சீனாவ சூப்பர்சோனிக்கு எச்டி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நேற்று நடத்தியது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம் இந்த சோதனையை நடத்தியது.

பாகிஸ்தானுக்கு வழங்குகின்றது:
அந்த நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது. இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் வெய் டோங்சு தெரிவித்தார்.

போட்டிக்கு போட்டி:
ஏற்கனவே எஸ்-400 ஏவுகணைக்கு போட்டியாக சீனா நவீன ஆளில்லா டிரோன்களையும் பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில், சீனா மீண்டும் பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக தயாரித்து அதை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications