சந்திராயன் விண்கலம் ஏவ மூலக்காரணம் வாஜ்பாய்: வளர்ச்சி திட்டத்தின் வித்தகர்
அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த பெயர் தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர். வாஜ்யாப்பிரமாக இருந்த காலத்தில் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த பெயர் தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.

வாஜ்யாப்பிரமாக இருந்த காலத்தில் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தினார். மிக முக்கியமான இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டு வழிநடத்திய பெருமை வாஜ்பாயை சேரும்.

போக்ரான் அணு சோதனை:
இந்தியா தற்போது அணு ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மில் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர் வாஜ்பாய். போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின் வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை.
போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின் வெளிநாடுகள் வாஜ்பாய்க்கு கண்டனங்கள் தெரிவித்தன. இந்திய மீது பொருளாதார தடைகளையும் விதித்தன. ஆனால் அதையும் மீறி இந்தியாவை 1999ல் அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக உருவாக்கியவர் வாஜ்பாய்.

தொலை தொடர்பு வளர்ச்சி:
ராஜீவ்காந்தி இறந்த பிறகு இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியானது 0.6% இல் இருந்து 2.8% உயர்ந்தது. இதற்கு பத்தாண்டுகள் எடுத்துக் கொண்டது இந்தியா. ஆனால் வாஜ்வாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்பட புதிய தொலை தொடர்பு கொள்ளை (என்டிபி நியூ டெலிகாம் பாலி) இந்தியாவின் தொலை தொடர் வளர்ச்சியை 3 % (1999) இருந்து 70 % (2012) உயர்த்தியது. இந்தச் சாதனையை ஒரு தொலைத் தொடர்பு துறையில் ஒரு புரட்சி என மாற்றுக் கட்சியினருக்கும் பாராட்டினர்.

சர்வ சிக்ஷா அபியான்:
வாஜ்வாய் பிரதமாக இருந்த காலகட்த்தில் தான் ரைட் டூ எஸூகேஷன் இன் இந்தியா என்ற திட்டத்தை சர்வ சிக்க்ஷா அபியான் என்ற பெயரில் கொண்டு வந்தார். இது அனைவருக்கும் கல்வி என்ற பெயரில் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி வாய்ப்பை பெற்றனர். கல்வி துறையில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

ஜிடிபி சரிவு இல்லை
வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போர் மோதலை எதிர்கொண்டது இந்தியா. அதேபோல 1999, 2000ம் ஆண்டு அரண்டு பெரும் சூறாவளி காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம் 2002-2003ல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ப் போர் என பல தாக்கங்கள் ஆனால் ஒரு போதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.

சந்திராயன் விண்கலம்:
நிலாவுக்கு 2008ல் இந்தியா விண்கலம் அனுப்ப இருக்கின்றது என்று பெருமையுடன் கூறியவர் வாஜ்பாய். இதன்பிறகு இஸ்ரோ சந்திராயன் திட்டத்தை உருவாக்கியது. 1998ல் இந்தியாவில் நேஷனல் ஹைவே டெவலப்மென்ட பிராஜக்ட் தங்கநாற்கர என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய். இந்தி திட்டத்தலி; கீழ் 49260 கிலோ மீட்டர் தொலைவிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டன. பழங்குடி, சமூன நலன், சமூகு நீதி போன்றவைக்கு அமைச்சம் மற்றும் வட கிழக்கு பதிக்கு தனிதுறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்வாய்.

சென்னையில் ஐடி பூங்கா:
சென்னையில் ஐடி பூங்கா வாஜ்பாயின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதை அவரே நேரில் வந்து திறந்தும் வைத்தார். இதைபோலவே பல்வேறு மாநிலங்களிலும் ஐடி பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு எடுத்த முக்கிய காரணமே ஆகும். நாட்டின் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளர்வதற்கும் வாஜ்பாயே மூலகாரணமாக இரந்துள்ளார். பிறகு லாகூர்- கராட்சிக்கு பஸ் போக்குவரத்தையும் வெற்றிகரமாக தனது ஆட்சி காலத்தில் துவக்கி வைத்தார்.


Click it and Unblock the Notifications