இதய நோய் வரும் முன்பே தெரிவிக்கும் மைக்ரோசாப்ட் தொழில் நுட்பம்
ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்டவைகள் மூலம் நம் உடல் நிலை குறித்து அறிந்து கொண்டாலும்.
இதய நோய் வருவதை முன் கூட்டியே தெரிவிக்கும் வகையில் மைக்ரோ சாப்ட் தொழில் நுட்பம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு உலக அளவில் போற்றப்படும் அளவுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது.

தற்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியே இருந்தாலும் இன்றை கால ஓட்டத்தில் சிக்கி கொண்டுள்ளோம். இதனால் நம் உடல்நிலையை குறித்து நாம் பெரிதும் கண்டு கொள்வதில்லை.

கால ஓட்டம்:
ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்டவைகள் மூலம் நம் உடல் நிலை குறித்து அறிந்து கொண்டாலும். இதயம் துடிப்பை தெரிந்து கொண்டாலும், இதயத்தை நோய் பற்றி தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. மனிதன் ஆரோக்கியமாக இருந்தால் தான் பணம் உள்ளிட்ட தேவையை சமாளிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு தற்போது புதிய தொழில் நுட்பத்தில் இதய நோயை கண்டறியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதயம் தான் உடலில் அனைத்து இயக்கத்திற்கும் பெரும் காரணியாக இருக்கின்றது.

புதிய மென் பொருள்:
மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து உடல் நலம் சார்ந்த ஏஐ நெட்வொர்க் என்றும் திட்டத்தின் கீழ் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் இயங்கும் புதிய மென்பொருள் இதயம் சார்ந்த பிரச்னைகளை முன் கூட்டியே கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை:
இந்நிலையில் ஏஐ சார்ந்த ஏபிஐ மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பை நோய் வருவதை முன் கூட்டி கணிக்க முடியும் மைக்ரோ சாப்ட அல்யூரில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென் பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதாற்கான ஆபத்தை மிக துல்லியமாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவும் நிலை:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைந்து இந்த மென்பொருள் இயங்குகிறது. மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ அல்லது துவக்க நிலையில் இருக்கின்ற என்பதை இந்த மென்பொருள் கணித்து நமக்கும் உதவுகின்றது.


Click it and Unblock the Notifications