அதிர்ச்சி : ரகசிய விண்வெளி திட்டம் அம்பலம்!
ரகசியான விண்வெளி திட்டம் ஒன்றிற்கான பணிகள் நமக்குத் தெரியாமலேயே 1980 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் யுஎஃப்ஒ ஆய்வாளரான ரிச்சார்டு டோலன் கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டம் குறித்த ரகசிய ஆய்வில் ஈடுபட்டு பல்வேறு ரகசியங்களைச் சேகரித்திருக்கின்றார்.

ஆய்வு
பிரபஞ்சத்தில் மனித இனம் தனியே இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் பூமி கிரகம் மிகவும் உறுதியான ஒன்றாக இருக்கின்றது என டோலன் தனது ஆய்வு விளக்கத்தில் தெரிவித்தார்.

ஹேக்கிங்
இத்திட்டம் குறித்த சில தகவல்களை கேரி மெகினான் என்ற ஹேக்கர் மூலம் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார், கேரி அமெரிக்க அரசு கணினிகளை ஹேக் செய்து இந்தத் தகவல்களை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏலியன்
அமெரிக்க அரசு கணினிகளை ஹேக் செய்ததில் யுஎஃப்ஒ, எதிர்ப்பு ஈர்ப்பு மற்றும் இலவச ஆற்றல் குறித்து பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்
இந்த ஆய்வில் அமெரிக்க அரசு ஈடுபட்டிருக்கும் ரகசிய விண்வெளி திட்டம் குறித்த ஆதாரங்களை கைப்பற்றியதோடு அமெரிக்கா தற்சமயம் எதிர்ப்பு ஈர்ப்பு சார்ந்த கருவிகளை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திட்டம்
அமெரிக்காவின் ரகசிய விண்வெளி திட்டத்தின் மூலம் உலகத்தைச் சேராத அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கின்றது.

திட்டம்
பூமியில் நமக்குத் தெரியாமல் பல்வேறு விடயங்கள் அரங்கேறி வருகின்றது. இதோடு பல்வேறு நாசா அதிகாரிகளும் ஏலியன் மற்றும் அரசு மறைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அணு ஆயுத போர்
நிலவில் கால் பதித்த ஆறாவது மனிதரான எட்கர் மிட்செல் தன் மறைவிற்கு சில நாட்களுக்கு முன் பூமியில் ஏற்பட இருந்த அணு ஆயுத போர் ஒன்றை ஏலியன்கள் நிறுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.

போர்
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட இருந்த அணு ஆயுத போரினை ஏலியன்கள் தடுத்து நிறுத்தியதாக மிட்செல் தெரிவித்திருந்தார்.

ஏலியன்
இந்தப் போரினை தடுத்து நிறுத்தவே ஏலியன்கள் பூமிக்கு வந்தனர் என்றும் மிட்செல் நம்பிக்கை கொண்டிருந்தார்.

யுஎஃப்ஒ
இந்தப் போரினை நிறுத்தும் நோக்கத்தில் தான் பல்வேறு யுஎஃப்ஒ'கள் அமெரிக்காவின் ஏவுகணை தளம் மற்றும் முதல் அணு ஆயுதம் சோதனை செய்யப்பட்ட பகுதிகளில் தென்பட்டதாக மிட்செல் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications