Just In
- 45 min ago புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- 56 min ago Jio அடிச்ச சிக்ஸர்.. 90 நாட்களுக்கு நாட் அவுட்.. 150GB டேட்டா.. இலவச IPL மேட்ச் 2024 சந்தா.. என்ன திட்டம்?
- 2 hrs ago அல்டிமேட் அம்சங்களுடன் PS5 Pro.. பிளேஸ்டேஷன் 5 வரிசையில் ஒரு மாஸ்டர் பீஸ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- 2 hrs ago அதிரவைக்கும் விலை.. 200 இன்ச்.. டால்பி அட்மாஸ்.. புதிய 4K புரொஜெக்டர் இந்தியாவில் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Sports கேகேஆர் அணியின் பேட்டிங் மிரட்டலா இருக்கே! பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா
- News "பாஜக உடன் கூட்டணி அமைக்கும் பாமக!" அதிகாரப்பூர்வ தகவல்- ஒரே நாளில் மொத்தமாக மாறிய அரசியல் களம்
- Movies Director Sundar C: தாமதமாகும் அரண்மனை 4 ரிலீஸ்.. பாலிவுட்டில் என்ட்ரியாகும் சுந்தர் சி!
- Lifestyle உங்க மூக்கு மேல கருப்பா சொரசொரன்னு இருக்கா? அப்ப தினமும் நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
- Finance ஐடி ஊழியர்களுக்கு அடுத்த ஷாக்.. இந்த வருடம் சம்பள உயர்வுக்கும் பிரச்சனையா..?
- Automobiles எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் விலைக்கும் சம்பந்தமே இல்ல.. 120 கிமீ ரேஞ்ஜ் தரும் இதன் விலை ரூ. 80 ஆயிரமாம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள்.!
மனித-ஏலியனுக்கு பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு இவர்கள் பார்த்துக் கொண்டும் நலம் விசாரித்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஏலியன்கள் குறித்து ஏராளமான விஷயங்களும், கற்பனைக்கு எட்டாத கருத்துக்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன. ஏலியன்கள் குறித்து ஏராளமானோர் பல விதமான கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பூமியில் கார்பன் உடலோடு ஏலியன்கள் இருக்கின்றன. இதனால் ஏலியன்களை அவ்வளவு சீக்கிரம் பூமியில் அடையாளம் காண மனிதர்களால் முடிவதில்லை.
இவ்வாறு நாசா விஞ்ஞானி ஒருவர் கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில ஏலியன்கள் பூமிக்கு இனச் சேர்க்கைக்காக வந்து செல்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
ஏலியன்கள் யார்?
ஏலியன்கள் என்பது மனித உருவத்தை விட பெரியதாகவும், அல்லது சிறியதாகவும், இந்து சமய புராணங்களில் குறிப்பிட்ட கடவுள் தான் ஏலியன்கள் என்றும்
ஒரு சில ஆய்வாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இதிகாசம், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுள்கள் குறித்து நாசாவும் ஆராய்ந்து வருகின்றது.
அபூர்வ சக்தி படைத்தவர்கள்:
அவர்கள் மனிதர்களை காட்டிலும் விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதிலும் அபூர்வ சக்தி படைத்தவர்கள் என்று ஸ்டீபென் ஹாங்கின்ஸ் கூறியிருந்தார்.
அவர்கள் பூமிக்கு வரும் போது, அவர்களுடன் நாம் தொடர்வு வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் மனித இனத்தை அழிக்கவும் கூடும் என்று மாற்று திறனாளியான ஆராய்ச்சியாளர் ஸ்டீபென் ஹாங்கின்ஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.
தொழில் நுட்பம்:
விண்வெளி ஆராய்ச்சி குறித்து மனிதர்கள் அங்கு பயணம் செய்கின்றர். ஆனால் பயணிக்கும் கலன்கள் மிகவும் ஒளியின் வேகத்தை விடவும் வேகம் குறைவு.
ஏலியன்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆனது மிகவும் அதி விரைவு. அதாவது ஒளியின் வேகத்தை விடவும் பன் மடங்கு அதிகம்.
அவர்கள் பயணிக்கும் சாதனத்தை பறக்கும் தட்டு (ஏலியன் ஷிப்) என்று கூறுகின்றோம்.
பூமிக்கு தகவல் அனுப்பிய ஏலியன்கள்:
நாசா ஆய்வு விண்வெளி மையத்தில் இருந்து லேசர் கதிர்வீச்சு, அதிர்வெண் உள்ளிட்டவைகள் மூலம் அவைகள் பூமிக்கு தகவல் அனுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் ஆங்காங்கே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பூமிக்க வரக் காரணம் ?
ஏலியன்கள் பூமிக்கு வர பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. பூமியை அவர்கள் அதிகாரத்திலும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
தன்னிடம் அதிக சக்தி இருப்பதால் மனிதர்களை அடிமையாக்கி அவர்கள் ஆட்சி செய்ய விரும்பவுதாகவும் சொல்லப்படுகின்றது.
மனிதர்களுடன் தொடர்ப்பு:
ஏலியன்கள் மனிதர்களுடன் இணைந்து குழந்தைகளை பெற்றுள்ளனர் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்த போது, அவர்களுடன் ஆண்களுடன், பெண்களுடன் ஏலியன்கள் இணைந்து குழந்தைகளை பெற்றுள்ளனர்.
இதுவரை பல்வேறு தேசங்களிலும் ஏலியன்கள் போன்று இதுவரை மனித-ஏலியன் குழந்தைகளும் பிறந்து வருகின்றன.
மனித-ஏலியன்கள்:
மனிதனுக்கும் ஏலியன்களுக்கும் பிறந்தவர்களே மனித-ஏலியன் என்று அழைக்கிப்படுகின்றனர். இவர்கள் பார்ப்பதற்கு மனிதர்களை போல இருந்தாலும் அவர்களுக்கு ஏலியன்கள் சக்தி அப்படியே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
உறவினர்களை பார்க்க வருகின்றனர்:
மனித-ஏலியனுக்கு பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு இவர்கள் பார்த்துக் கொண்டும் நலம் விசாரித்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஒரு சில பெண்களின் கணவன் மார்கள் ஏலியன்களாக இருப்பதால், இணை சேர்க்கைக்காகவும் அவர்கள் வந்து சென்றுள்ளனர்.
நாசா விஞ்ஞானி கருத்து:
நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மைய கம்ப்யூட்டர் விஞ்ஞானியான பேராசியரியர் சில்வானோ பி கொலொம்பனோ பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டன. இதை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்று ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.
கார்பன் உடல்:
மாறுபட்ட உடல் அமைப்புடனும் கார்பன் உடல் உறுப்புகளோடு ஏலியன்கள் பூமியில் இருப்பதால் அவர்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை என்றும் விஞ்ஞானி சில்வானோ தெரிவித்துள்ளார்.
பரிசீலனை செய்ய வேண்டும்:
ஏலியன்கள் குறித்து பழைய கணிப்புகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு குணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாறுப்பட்ட தொழில் நுட்பம்:
ஏலியன்கள் பூமிக்கு மிகவும் சிறிய அளவிலும் இருக்கலாம். தற்போது நிலவும் கருத்துப்படி மேம்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் சில்வானோ தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470