அருகில் உள்ள கிரகங்களில் ஏலியன் உயிர்கள்.! அமெரிக்க ஆய்வின் அதிர்ச்சி முடிவு.!
உயர்ந்த கதிர்வீச்சுடைய பூமி போன்ற எக்சோபிளானெட் கிரகங்களிலும் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உயர்ந்த கதிர்வீச்சுடைய பூமி போன்ற எக்சோபிளானெட் கிரகங்களிலும் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

எக்சோபிளானெட் பற்றிய இந்த அதிர்ச்சி தகவல் அனைவரின் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.

எக்சோபிளானெட்களில் உயிர்கள் வாழ முடியுமா?
கடுமையான கதிர்வீச்சு உடைய எக்சோபிளானெட்களில் உயிர்கள் வாழ முடியுமா? என்ற கேள்வி பல விஞ்ஞானிகளிடம் இருந்து வந்துள்ளது. அண்மைய ஆய்வின்படி சூரியக் குடும்பத்தைச் சுற்றி உள்ள எக்சோபிளானெட்களில், உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

அல்ட்ராவைலெட் கதிர்வீச்சு
பூமிக்கு அருகில் உள்ள பிற எக்சோபிளானெட்களில் இருக்கும் அல்ட்ராவைலெட் கதிர்வீச்சுகளைக் காட்டிலும், குறைந்த அளவிலான கதிர்வீச்சின் காரணத்தால் தான் பூமியில் உயிரினங்கள் உருவாகின என்று யுனைட்டட் ஸ்டேட்ஸில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தின் வானவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ப்ராக்ஸிமா-பி கிரகம்
இதேபோல் பூமிக்கு அருகில் உள்ள ப்ராக்ஸிமா-பி கிரகத்தில், பூமியைக் காட்டிலும் 250 மடங்கு அதிகப்படியான எக்ஸ்ரே கதிர்வீச்சு இருப்பதாகவும் யுனைட்டட் ஸ்டேட்ஸ் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வானவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்
நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி அதிகப்படியான குளறுபடியான இயல்புநிலையில், பல அலங்கோலமான சூழ்நிலையிலும் கூட உயிர்கள் வாழும் விதத்தில் தன்னை உருவாக்கிக் கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர்கள் உருவாகுவதற்கும், வாழ்வதற்கும் வாய்ப்புகள் அதிகம்
அதேபோல் நம் அருகில் உள்ள எக்சோபிளானெட்களிலும் இதுபோன்ற நிலையே நிலவி வருவதாகவும், தற்பொழுது உள்ள நிலையில் உயிர்கள் உருவாகுவதற்கும், வாழ்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

அல்ட்ராவைலெட் கதிர்வீச்சு ஆய்வின் முடிவு
புரோசிமா-பி, ட்ராப்பிஸ்ட்-1இ, ரோஸ் 128 மற்றும் எல்.எச்.எஸ்-1140பி போன்ற எக்சோபிளானெட்களில் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராவைலெட் கதிர்வீச்சு ஆய்வின் முடிவுகள், ராயல் அஸ்ட்ரானோமிக்கல் சொசைட்டி பத்திரிகையின் மாதாந்திர அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவாக அருகில் உள்ள எக்சோபிளானெட்களில் வாழ்வாதாரங்கள் இருப்பது சத்தியமே என்று அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி
நமக்கு அருகில் உள்ள எக்சோபிளானெட்களில் பல மடங்கு அதிக அளவிலான கதிர்வீச்சு தாக்கல் இருக்கிறது என்று அதிர்ச்சி ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சுமார் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு கிடைத்த கதிர்வீச்சைவிட இந்த எக்சோபிளானெட்களுக்கு கிடைக்கும் கதிர்வீச்சு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூக்ளியிக் அமிலங்கள் உருவாகி உயிர்கள் உருவாகும்
அதிக அளவு கதிர்வீச்சின் காரணமாக உயிரியல் மூலக்கூறுகளான நியூக்ளியிக் அமிலங்கள் உருவாகி, உயிர்கள் மாற்றமடையும் அல்லது உயிர்கள் உருவாகாமல் மூடுவதற்கும் காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஏலியன் உயிர்கள்
அதுபோல் அருகில் உள்ள எக்சோபிளானெட்களில்நியூக்ளியிக் அமிலங்கள் உருவாகி ஏலியன் உயிர்கள் உருவாக்கி இருக்க கூடும் என்று நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications