ரோபோக்களைப் பற்றி நமக்கு தெரியாத 7 விஷயங்கள்.!
ரோபோ என்பதற்கு,மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என பொதுவாக கூறலாம். ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1921ம் ஆண்டு பயன்படுத்தினார்.
ரோபோ பொறுத்தவரை இன்று வியாபார மற்றும் தொழில் ரீதியில் தனியார் நிறுவனங்கள் தொழில்களை செலவு பிடிக்காமல் அதிக துல்லியமாகவும் மனிதர்களைக் காட்டிலும் நம்பகமாகவும் செய்ய ரோபோ உதவுகிறது.

இந்த ரோபோக்கள், மனிதனை எந்நேரத்திலும் எதிர்க்காது. தேவைப்பட்டால், மனிதர்கள் இவற்றை அழிக்கும் வண்ணம் உருவாக்கப்பட உள்ளது.தானாக எந்த வேலையையும் செய்யாமல், மனிதனின் உத்தரவுகளை மட்டுமே இவை செயல்படுத்தும் வகையில் இவை உருவாக்கப்படுகிறது.

செக் குடியரசு எழுத்தாளர்
ரோபோ என்பதற்கு,மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என பொதுவாக கூறலாம். ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1921ம் ஆண்டு பயன்படுத்தினார்.

ஜப்பான்
ஜப்பான் நாட்டில் பல மில்லியன் தொழிற்துறை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக இதன் மூலம் அதிக லாபாம் வருகிறது என்று ஜப்பான் நாட்டின் உள்ள பல தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

லியனார்டோ டா வின்சி
லியனார்டோ டா வின்சி என்ற ஒவியர் 1495ல் ஒரு ரோபோவைக் கண்டுபிடித்தார்.1928ல் ERIC என்ற ரோபோவை டபிள்யூ எச்.ரிச்சர்ட்ஸ் என்பவர் லண்டனில் சொசைட்டி ஆப் மாடல் எஞ்சினியர்ஸில் முதன்முதலில் காட்சிக்கு வைத்தார்.1939 மற்றும் 1940ல் நடந்த உலகக் கண்காட்சிகளில் வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்Electro என்ற ரோபோவைக் காட்சிக்கு வைத்தது.

அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனின் மறைவிடத்திற்கான தகவலையும், பின்பு ஈராக்கில் சாலையோர வெடிகுண்டுகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும் அறிய 4,000 ரோபோக்கள் மற்றும் ராணுவப் படைகளையும் பயன்படுத்தியது அமெரிக்கா.

PackBot:
PackBot என்ற ரோபோக்களை தயாரிக்கு நிறுவனம் இதுவரை 2 மில்லியன் ரோபோ கிளீனர்களை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த வகை ரோபோ மாடல்கள் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மனித உருவம் கொண்ட ரோபோ
உலகின் முதல் மனித உருவம் கொண்ட ரோபோ, 1939 இல் அறிமுகமானது, குறிப்பாக 7-அடி உயரம் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது மனித உருவம் கொண்ட ரோபோ. மேலும் 700-க்கும் அதிகமான வார்த்தைகளை "பேசியது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள் :
2040 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு அத்தியாவசிய பணியிலும் பின்பு , கொள்கை ரீதியாகவும், நம் சமுதாயத்தை நம்மால் பெருமளவில் நன்றாக கொண்டு செல்ல ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று Carnegie Mellon's இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் ஹான்ஸ் மொராவேக், தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








