பாலியல் புகாரில் சிக்கிய 50 கூகுள் ஊழியர்கள் நீக்கம்.! மீடூ காரணமா?
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களில் சுமார் 50 பேருக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுமார் 50 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது உலகம் முழுக்கவும் பாலியல் புகார் குறித்து, பெண்கள் டுவிட்டரில் பதிவிடுவதால், மீடூ ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ளது.
இதில் தான் ஏராளமான பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களிலும் ஆண்களால் ஏற்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல், கொடுமைகள் குறித்து கூறி வருகின்றனர்.

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களில் சுமார் 50 பேருக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
சுமார் 50 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புகார்கள் மீடூவில் தான் முன் வைக்கப்பட்டதா என்று ஒரு புறம் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளன.

மீடூ டிரெண்டிங்:
பாலியல் புகார்கள் குறித்து தற்போது உலகம் முழுவதும் உள்ள பெண்கள் டுவிட்டர் கணக்கில் மீடு என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி புகார் கூறி வருகின்றனர்.
இதனால் டிரெண்டிங் ஆகியுள்ளது. இதில் ஏராளமான பிரபலங்களின் பெயர்களும் சிக்கி சின்னாபின்னமாகின்றது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்கள் தற்போது தையரியமாக புகார் கூறி வரும் களமாக மீடூ உருவெடுத்துள்ளது.

சிக்கிய இந்திய சினிமா:
இந்திய சினிமாவில் பாலிவுட், கோலிவுட், சாண்டல்வுட், டோலிவுட்களில் உள்ள பிரபலங்கள் செய்த பாலியல் தொந்தரவு குறித்து தற்போது மீடூவில் புகார் கூறி வருவதால், உலகம் முழுவதும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகின்றது.
இதில் ஒரு சிலர் பெயர்களும் தவறாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு சிலர் குறித்து குற்றம்சாட்டியும் வருகின்றனர். இதனால் மீடூ விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது.

கூகுளில் சுமார் 50 பேர் பணி நீக்கம்:
கூகுள் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டாக பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டது. இதனால் கூகுள் நிறுவனத்துக்கு சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சை சுமார் 50 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ் கூறியுள்ளது.

13 பேர் மூத்த மேனேஜர்:
பாலியல் புகாரில் சிக்கியவர்களில் 13 பேர் மூத்த மேனேஜர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஆவர்கள். இவர்களுக்கு யாருக்கும் பணிக் கொடை ஏதும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 பில்லியன் பணிக்கொடை:
அதேவேளையில் 2014ம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக கூகுளின் ஆன்டிராய்டு மொபைல் சிஸ்டத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின் வெளியேற்றப்படும் போது, அவருக்கு 90 பில்லியன் டாலர்கள் பணிக்கொடையாக வழங்கப்பட்டது.

டுவிட்டரின் மீடூ காரணமா?
இந்த புகார்கள் மீடூ ஹேஷ்டேக் பயன்படுத்தி முன் வைக்கப்பட்டதா என்றால், இல்லை, தற்போது தான் மீடூ டெண்டிங் ஆகியுள்ளது. கடந்த 2 ஆண்டாகவே கூகுள் நிறுவனத்தில் பாலியல் புகார் குவிந்தது. இதற்கு தனி விசாரணை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஒரு சில புகார்கள் மீடூவிலும் முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications