பூமி நோக்கி வரும் 2700 மெகாடன் அழிவு சக்தி கொண்ட சிறுகோள்!பேரழிவிற்கான வாய்ப்பு பற்றி நாசா அறிவிப்பு
பூமியின் திசையில் பூமியை நோக்கி ராட்சச சிறுகோள் ஒன்று 2,700 மெகாடன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த ராட்சச சிறுகோள் வரும் அக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக் கூடும் என்று நாசா சிறுகோள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

340 மீ விட்டம் கொண்ட ஏரிகள் பாறை
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த ராட்சச சிறுகோளிற்கு அஸ்டிராய்டு FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று நாசா சிறுகோள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்கும்
அதேபோல் நாசா கனிந்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. அஸ்டிராய்டு FT3 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் அக்டோபர் 3, 2019 தேதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டி செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு ஏற்படும் பேரழிவு
நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது தான், ஆனால் இச்சிறுகோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயமாக விலகி பூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகமில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

45,500 மைல் வேகத்தில் விழுந்து பேரழிவு
நாசா அறிவிப்பின்படி இந்த சிறுகோள் எடை நம்பமுடியாத அளவிற்கு இருக்கிறது. இந்த சிறுகோள் 55,000,000,000 கிலோ எடையுள்ளது என்று நாசா கணக்கிட்டுள்ளது. இச்சிறுகோள் பூமியை நேரடியாகத் தாக்கினால், வளிமண்டல நுழைவு நேரத்தில் இந்த பாறை விநாடிக்கு 20.37 கி.மீ வேகத்தில் அல்லது 45,500 மைல் வேகத்தில் கிரகத்திற்குள் விழுந்து பேரழிவை ஏற்படுத்தும் என்று நாசா தெரிவித்துள்ளது.

ஹிரோஷிமா அணுக் குண்டின் சக்தியைவிட அதிகம்
இந்த சிறுகோள் ஏற்படுத்தக்கூடிய அழிவு, சுமார் 2,700 மெகாடன் எடை கொண்ட டி.என்.டி குண்டுகளுக்குச் சமமானது என்று நாசா கூறியுள்ளது. சிறுகோள் FT3 சக்தியுடன் 1945 ஆம் ஆண்டு, ஜப்பானின் ஹிரோஷிமா மீது வீழ்த்தப்பட்ட அணுக் குண்டின் சக்தியை ஒப்பிட்டுப்பார்க்கையில், ஹிரோஷிமா மீது வீழ்த்தப்பட்ட அணுக் குண்டின் சக்தி வெறும் 13,000 கிலோடன் முதல் 18 கிலோடன் தான் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

அடுத்த சிறுகோள் தாக்குதல்கள்
இந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி, முதல் முறையாக இந்த சிறுகோள் பூமி நோக்கி வருகிறது. இதன்பிறகு, அக்டோபர் 2 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டும், பின்னர் அக்டோபர் 3 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டும் இந்த சிறுகோள் நம்மைத் தாக்கக் கூடிய சிறிய வாய்ப்புடன் பூமியை நெருங்கும் என்று நாசா மதிப்பிடுகிறது.

அக்டோபரில் இந்த சிறுகோள் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்துமா?
அதிர்ஷ்டவசமாக, ஆபத்து நம்பமுடியாத அளவிற்குக் குறைவாக உள்ளது, ஆனால் தற்பொழுது உள்ள சுற்றுப் பாதையிலிருந்து விலகினால் பேரழிவு நிச்சயம் என்று நாசா தெரிவித்துள்ளது. பேரழிவிற்கான ஒரு சிறிய வாய்ப்பாக சுமார் 11,000,000 முறையில் ஒரு முறை பூமியை இந்த சிறுகோள் தாக்க வாய்ப்புள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

பூமியை கடந்து சென்று செயலிழக்க வேண்டும்
இந்த சிறுகோள் பூமியைத் தாக்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் சிறுகோள் FT3 பூமிக்கு நேராக வராமல் கடந்து சென்று செயலிழக்க வேண்டும். இந்த சிறுகோள் தாக்கத்தின் பேரழிவுக்கான முரண்பாடு வாய்ப்புகளாக 0.0000092% அல்லது 99.9999908% என்ற அளவு வாய்ப்பில் சிறுகோள் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளது என்று நாசா கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications