29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.!
எகிப்தியன் கண்ணாடி என்று அழைக்கப்படும் எகிப்து பாலைவனத்தில் மட்டுமே காணப்படும் பாலைவன கற்களின் பின்னல் உள்ள மர்மம் 100 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது தீர்விற்கு வந்துள்ளது.
எகிப்தியன் கண்ணாடி என்று அழைக்கப்படும் எகிப்து பாலைவனத்தில் மட்டுமே காணப்படும் பாலைவன கற்களின் பின்னல் உள்ள மர்மம் 100 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது தீர்விற்கு வந்துள்ளது.

லிபியான் பாலைவன கண்ணாடி கற்கள்
லிபியான் பாலைவன கண்ணாடி கற்கள் சஹாரா பாலைவனம், கிழக்கு லிபியா மற்றும் மேற்கு எகிப்து பகுதிகளில் பெரிதும் காணப்படும். இந்த பாலைவனம் கற்கள் 29 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு எகிப்தில் பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆராய்ச்சியாளர்கள் வாக்குவாதம்
நீண்ட காலமாக இந்த கற்கள் எப்படி உருவானது என்று பல வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. பல ஆராய்ச்சியாளர்கள் இந்த கற்கள் ஏர்பர்ஸ்ட்டினாள் உருவானது என்றும், இன்னும் பலர் விண்கல் தாக்கத்தினால் உருவானது என்றும் தெரிவித்து வாதாடி வந்தனர்.

விண்கல் தாக்குதல்
இந்த கற்கள் உருவானதற்கான உண்மை காரணத்தை 100 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் முடிவிற்குக் கொண்டுவந்துள்ளனர். இந்த கற்கள் விண்கல் தாக்கத்தினால் மட்டுமே ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற தீர்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

100 வருடத்திற்கு பிறகு தீர்வு
29 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவை ஏற்படுத்திய ஒரு ராட்சஸ விண்கல் தாக்கத்தினால் மட்டும் தான் பல ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவிற்கு இந்த லிபியான் பாலைவன கண்ணாடிகள் உருவாகியுள்ளது என்ற விஞ்ஞான பூர்வ தீர்வை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications