Just In
- 5 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 6 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 6 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 7 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்: எதற்காக?
பட்-ன் நோக்கம் என்னவென்றால் ஏற்கனவே உள்ள மருந்துகளின் மூலம் புதிய நோய்களை குணப்படுத்த முடியுமா என்பது தான்.
மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தை கொண்டு நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? பாரசைட்டை கொல்லும் மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்தலாமா? முடி கொட்டும் பிரச்சனையை இதய நோய்க்கான மருந்தை கொண்டு சரிபடுத்தமுடியுமா? இது போன்ற மருந்துகளுக்கும் match.com அல்லது tinder போன்ற தளங்கள் ஜோடிப்பொருத்தம் பார்க்க இருந்தால் எப்படி இருக்கும்? டாக்டர் அடுல் பட்-ஐ நம்பினால் இது சாத்தியமே!
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் எதிர்பாராவிதமாக வேறு மருத்துவத்திற்கு பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்தியவை. பட் UC சான்பிராசிஸ்கோ-ன் இயக்குநர் , பிரிசெல்லா சான் மற்றும் மார்க் சக்கர்பெர்க் அதில் சிறப்பு பேராசியர்களாக உள்ளனர். இவரின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மார்க் 10மில்லியன் டாலர் பரிசளித்துள்ளார். பட்-ன் இந்த ஆராய்ச்சியை "டேட்டா ரீசைக்ளிங் " என அழைக்கிறார்.
இதைப் பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால்,இது போன்ற மருந்துகளை எதிர்பாராமல் கண்டுபிடிப்பதற்கு பதிலாக பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து கண்டறிவது தான்.
யூ.சி.எஸ்.எப் இன்ஸ்டியூட் ஆப் கம்ப்யூட்டேசனல் ஹெல்த் சயின்ஸ் தலைவரான பட் "trillion points of data" என்பதை நம்புகிறார். இதன் அடிப்படையில் பொதுவெளியில் கிடைக்கும் டிரில்லியன் கணக்கான தரவுகளை கொண்டு அனைத்துவித நோய்களுக்கும் , புதிதாக உருவாகும் நோய்களுக்கும் தீர்வுகளை கண்டறிந்து நோயாளிகளை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கமுடியும்.
பொதுவெளியில் உள்ள தரவு என்பது மிகவும் உயர்தரமாக இருந்தாலும், நம்மிடம் இருப்பது மிகவும் பிரம்மாண்டமானது. எடுத்துக்காட்டுக்கு நாசா-வை எடுத்துக்கொண்டால், ஒராண்டில் பல புகைப்படங்களை எடுத்தாலும் அவற்றை பார்க்கும் அளவிற்கு வானிலை ஆய்வாளர்கள் இல்லை. ஆனால் அறிவியல் பூர்வமான தகவல்கள் குறிப்பிட்ட சிறப்பு சமயங்களில் மட்டுமே பயன்படும். புற்றுநோய்க்கு பயன்படும் தகவல்கள் அதற்கு மட்டுமே பயன்படாமல், அதற்கு துளியும் சம்பந்தம்இல்லாத இடத்திலும் அதே தரவுகள் பயன்படும்.
தற்போது சிறந்த அறிவியலாளர்கள் பலரும் தங்களது தரவுகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தி ,சக அறிவியலாளர்களின் சரிபார்ப்பிற்கு பின்பே டாப் இதழ்களில் வெளியிடப்படும். எனவே மருந்துகள் மற்றும் நோய்களின் தரவுகளை கணிணிமுறையில் இணைத்து, எந்த மருந்துக்கலவையின் மூலம் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்பதை கண்டறிந்து அந்த மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்கிறார் பட்.
யூ.சி.எஸ்.எப் ல், மூன்றாண்டுகளுக்கான மின்னணு சுகாதார அறிக்கைகளை பரிந்துரைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அந்த அறிக்கைகளில் உள்ள தரவுகளை பார்ப்பதன் மூலம் மெய்நிகர் குளூக்கோஸ் கண்காணிப்பு அமைப்பை பயன்படுத்தி நோயாளிகளுக்கு எந்த விகித்ததில் குளுக்கோஸ் தரவேண்டும் என கண்டறியலாம்.
பட்-ன் நோக்கம் என்னவென்றால் ஏற்கனவே உள்ள மருந்துகளின் மூலம் புதிய நோய்களை குணப்படுத்த முடியுமா என்பது தான். இது புதிய மருந்துகளை சந்தைக்கு கொண்டுவருவது இல்லை. ஆனால் ஏற்கனவே உள்ள மருந்துகளை புதிய விசயத்திற்கு பயன்படுத்துவது. மருந்து நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் கொட்டி மருந்துகளை கண்டறிய ஆராய்ச்சிகள் செய்யும் நிலையில் இது சிறந்த முறைதான்.
நியூமெடி (NuMedii)என்னும் ஸ்டார்ட் நிறுவனம் , இந்த வகையில் தயாரிக்கப்படும் மருந்துகளை சந்தைப்படுத்த தயாராகவுள்ளது. சரியான கூட்டாளிகள், வெற்றிகரமான பரிசோதனைகள் என்ற கட்டங்களை தாண்டி 3-5 ஆண்டுகளில் நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் கிடைக்கும் என்கிறார் பட்.
துரதிஸ்டவசமாக இந்தியாவில் சில காலத்திற்கு பின்பே இந்த மருந்துகள் கிடைக்கும். இந்த வகையில் கிடைக்கும் மருந்துகளின் விலை தயாரிப்பு செலவுகளால் தற்சமயம் அதிகமாக இருக்கும். ஒரு வருட மருத்துவத்திற்கு மருந்தின் விலை அதிகபட்சமாக $750,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலை இந்தியாவிற்கு ஏற்றதா என தெரியவில்லை என்கிறார் பட்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470