டிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.! தப்பிக்க இதைச் செய்யுங்கள்.!
ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க தவறினால், வங்கிச்சேவை டிசம்பர் 1 முதல் தடை செய்யப்படுமென்று உறுதியாக கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 1, 2018 தேதிக்குள், ஸ்டேட் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை, உங்களின் வங்கி கணக்குடன் இணைக்காதபட்சத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய(எஸ்.பி.ஐ) வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இணைய வங்கி சேவை நிச்சயம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க தவறினால், வங்கிச்சேவை டிசம்பர் 1 முதல் தடை செய்யப்படுமென்று உறுதியாக கூறப்பட்டுள்ளது.
வங்கியின் வலைத்தளம் வழியாக, தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்செய்தி பற்றி அறிவித்துவிட்டது. இதுவரை உங்களின் மொபைல் எண் பதிவு செய்யப்படாவிட்டால், அருகில் உள்ள வங்கி கிளைக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள்.

உடனடியாக இதனை வாடிக்கையாளர்கள் பின்பற்றாவிட்டால், டிசம்பர் 1 முதல் சம்மந்தப்பட்ட பயனரின் இணைய வங்கி சேவை முற்றிலும் தடை செய்யப்படுமென்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications