இந்தியா முழுவதும் காவல் நிலையங்களில் ஆன்லைன் புகார் அளிக்கலாம்.! மத்திய அரசு நடவடிக்கை.!
முதல் தகவல் அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறைமுறை விரைவில் 34 மாநிலங்களிள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது முதல் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசு துறைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகின்றது.

முதல் கட்டமாக பல்வேறு துறைகளும் டிஜிட்டல் மயமாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. மேலும், கிராம பஞ்சாயத்துகள் தோறும் இலவச வை-பை உள்ளிட்ட வசதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியா முழுக்க உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆன்லைன் புகார் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை:
முதல் தகவல் அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறைமுறை விரைவில் 34 மாநிலங்களிள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

குடிமகன்கள் ஆன்லைனில் புகார்:
காவல்துறையை நவீனப்படுத்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், குடிமக்கள் ஆன்லைனில் புகார் அளிப்பதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளது.

7 குற்றங்களுக்கு புகார் அளிக்கலாம்:
முதல் கட்டமாக இதில் 7 குற்றங்கள் தொடர்பான புகார்களை அக்க முடியும். மத்திய அரசு சார்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குள் புகார் அனுப்பி வைக்கப்படும்.

இணைதளம் மூலம் சரிபார்க்கலாம்:
மேலும், ஊழியர்கள், வாடைதாரர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோரின் விவரங்களையும் இணைதயம் மூலம் சரிபார்த்துக் கொள்ள முடியும். தனிநபரின் அந்தரங்க உரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு கருதி இணைதளத்தில் இடம்பெற்றுள்ள குற்ற ஆவணங்களை காவல் துறை அதிகாரிகள் தான் நேரடியாக பார்வையிட்டு மக்களுக்கு விளக்கங்களை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications