50 லட்சம் யூனிட் ஸ்மார்ட் போன் விற்று சியோமி சாதனை.!
சியோமி நிறுவனம் இந்தியாவில் ஒரு கோடி ரெட்மி 5 ஏ ஸ்மார்ட்போன்களை விற்றதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி 9 மாதங்களில் இந்த மைல்கல் சாதனையை சியோமி நிறுவனம் படைத்துள்ளது.
இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட் போன் விற்பனையில் சியோமி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மேலும், இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் மலிவான விலையாக இருந்தாலும், அதிக தொழில் நுட்ப வசதியுடன் கலக்கி வருகின்றது.

இதனால் இளைஞர்கள் உட்பட நடுத்தர வர்க்கத்தினர் முதல் கொண்டு இந்த ஸ்மார்ட் போன் மாடல்களை வாங்கி வருகின்றனர். பயன்படுத்த கூடிய வடிவத்தில் அழகாவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஒரு கோடி ரெட்மி 5 ஏ ஸ்மார்ட்போன்களை விற்றதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி 9 மாதங்களில் இந்த மைல்கல் சாதனையை சியோமி நிறுவனம் படைத்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் ரெட்மி 5ஏ ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனை டிசம்பர் மாதத்தில் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரெட்மி 5 ஏ ஸ்மார்ட்போன் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்ததுள்ளது.

விற்பனை துவங்கிய குறுகிய காலகட்டத்தில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன் ரெட்மி 5ஏ தான் என சியோமி அறிவித்துள்ளது.

மேலும் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஓரே ஸ்மார்ட்போனாக ரெட்மி 5 ஏ இருப்பதாகவும், தொடர்ந்து 9 மாதங்களாக இந்த நிலையை சியோமி நிறுவனம் தக்கவைத்து கொண்டு இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications