சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் தடை, தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் சியோமி மொபைல்களின் விற்பனையை நிறுத்த கோரி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எரிக்ஸன் இந்தியா தொடர்ந்த வழக்கில் திங்கள் கிழமை சீன நிறுவனத்தின் மொபைல் விற்பனை, விளம்பரம், இறக்குமதி ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் சுங்க அதிகாரிக்ளுக்கும் ஐபிஆர் விதி, 2007 இன் படி சியோமி பொருட்களை அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதோடு தடையை அமல் படுத்துவது குறித்து சியோமி இந்தியா அதிகாரிகளை சந்திக்க இரு ஆனையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
[லாக் ஆன எஹ்டிசி ஸ்மார்ட்போனை விடுவிப்பது எப்படி]
இது குறித்து கூறும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்களுக்கு வரவில்லை என்று சியோமி நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மானு ஜெயின் தெரிவ்த்துள்ளார்.
சியோமியை பொருத்த வரை இந்திய சந்தை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது குறித்து எங்கள் நிறுவனத்தின் சட்ட பிரிவு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். நிலைமையை சரி செய்ய எரிக்ஷன் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications