அடுத்த 1 வருடத்துக்கு சீன பொருளை வாங்காமல் இருக்க முடியுமா?- 87% இந்தியர்கள் பதில் இதுதான்!
அடுத்த ஒரு வருடத்திற்கு சீன பொருட்களை வாங்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்து பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 87% இந்தியர்கள் அளித்துள்ள பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 வைரஸ் தாக்கம்
உலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா சீனா இடையிலான உறவு
அதேபோல் இந்தியா சீனா இடையிலான உறவு மொத்தமாக முறியும் நிலையில் இருக்கிறது. லடாக் பிரச்சனைக்கு பின் இரண்டு நாட்டு உறவு மீண்டும் சரியாக வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.

சீன பொருட்களை புறக்கணிப்பது சாத்தியமா
சீன பொருட்களை புறக்கணிப்பது என்பது முழுமையாக சாத்தியமில்லை என்றாலும் மனதளவில் இந்தியர்கள் எந்தளவு தயாராக உள்ளனர் என்பது குறித்து தெரிவிக்கும் வகையில் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

87% பதில்கள் இதான்
இதுகுறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் இருந்து 235 மாவட்ட மக்களிடம் இருந்து சுமார் 32000 பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது. இதில் அடுத்த ஆண்டு சீன தயாரிப்புகள் வாங்குவதை புறக்கணிப்பீர்களா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதிலல் பெரும்பாலானோர் அதாவது 87% பேர் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க தயாராக இருக்கின்றனர்.

சியோமி, விவோ, ஒப்போ, ஒன்பிளஸ், டிக்டாக்
அதேபோல் சியோமி, விவோ, ஒப்போ, ஒன்பிளஸ், டிக்டாக் போன்ற சீன நிறுவன தயாரிப்புகளை புறக்கணிப்பீர்களா என்ற கேள்விக்கு, இப்போதே வாங்கமாட்டோம் என 58% பேரும், இனிமேல் வாங்கமாட்டோம் இருப்பினும் முன்னதாக வாங்கியதை பயன்படுத்துவோம் என 39% பேரும் பதில் அளித்துள்ளனர்.

97% பேர் சீன பொருட்களை புறக்கணிக்கவே தயார்
இந்த கேள்வியின்படி பெரும்பாலானோர் அதாவது 97% பேர் சீன பொருட்களை புறக்கணிக்கவே தயாராக இருக்கின்றனர். அதற்கேற்ப இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகரிக்க தொடங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயமாகும்.
source: indiatimes.com


Click it and Unblock the Notifications