உலகின் முதல் மெய்நிகர் அங்காடி கொரியாவில் திறக்கப்பட்டுள்ளது..!
தற்போது கொரியாவில் திறக்கப்பட்டுள்ள மெய்நிகர் அங்காடி, மக்களுக்கு அனைத்துப்பொருட்களும் எளிமையாக கிடைக்கும் வகையில் உள்ளன.
தற்போது அனைத்து வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மனிதர்கள் தங்கள் அன்றாட தேவையை மிகஎளிதில் பூர்த்திசெய்த்துகொள்கின்றனர்.
அந்தவகையில் தற்போது கொரியாவில் திறக்கப்பட்டுள்ள மெய்நிகர் அங்காடி, மக்களுக்கு அனைத்துப்பொருட்களும் எளிமையாக கிடைக்கும் வகையில் உள்ளன.

சியோல்:
சியோல் ரயில்நிலையம் சுரங்கப்பாதையில் அமைந்துள்ளது இந்த மெய்நிகர் அங்காடி. பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் அதிகப்பொருட்ச் செலவில் இவை உருவாகி உள்ளது. மேலும் இந்த அங்காடியை தென் கொரிய விற்பனையாளர் ஒருவர் திறந்து வைத்தார்.

மெய்நிகர் அங்காடி பொருட்கள்:
இந்த அங்காடிப் பொருத்தமாட்டில் பல்வேறு உணவுப்பொருட்கள் கிடைக்கும். மேலும் மின்னணுவியல், அலுவலகப்பொருட்கள் போன்ற மனிதர்களுக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். பெரும்பாலும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது இந்த மெய்நிகர் அங்காடி.

ஸ்மார்ட்போன்:
ஸ்மார்ட்போன் தொடர்புடைய பயன்பாட்டைப் பதிவிறக்கி பார்கோடுகளின் புகைப்படங்களை எடுத்து அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியும். மேலும் பால், ஆப்பிள்,அரிசி, பள்ளிமுதுக்குப்புறப் பைகள் போன்ற அனைத்துப் பொருட்களும் மெய்நிகர் அங்காடியில் கிடைக்கும்.

ஆர்டர்:
நீங்கள் பொதுவாக வேலைக்கு செல்லும்போதும் மற்றும் வீட்டிற்க்கு செல்லும் போதும் மெய்நிகர் அங்காடியில் பார்க்கும் பொருட்களை உங்கள் ஸ்மார்ட்போனில் பார்கோடு ஸ்கேன் செய்து அந்நிறுவனத்திற்க்கு அனுப்பினால் போதும். உங்களுக்கு தேவையான பொருட்கள் வீடு அல்லது அலுவலகத்திற்க்கு வந்து சேரும்.

மேலும் படிக்க;வோடபோன் 9ஜிபி இலவச டேட்டா அதிரடி ஆபர்.! ஜியோவிற்க்கு பதிலடி..!
வோடபோன் 9ஜிபி இலவச டேட்டா அதிரடி ஆபர்.! ஜியோவிற்க்கு பதிலடி..!


Click it and Unblock the Notifications