Just In
- 6 min ago
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 10 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 13 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- 15 hrs ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
Don't Miss
- News
மக்களே அலர்ட்! தமிழ்நாட்டில் இன்றும் தொடரும் மழை.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- Movies
தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எல்லா புகழும் வாட்ஸ் ஆப்-க்கே: 54 வயதில்காணாமல் போகி 94 கண்டுபிடிக்கப்பட்ட பெண்- நெகிழ்ச்சி சம்பவம்
கடந்த 1979-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் சாலையோரம் பரிதாபமான நிலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக வந்த லாரி ஓட்டுனர் ஒருவர் பார்த்துள்ளார். அந்த பெண்ணை அதிகமான தேனீக்கள் கடித்திருந்த நிலையில், சரியாக பேசமுடியமால் இருந்துள்ளார்.

உடனே அந்த ஓட்டனர் தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். மேலும் ஓட்டனரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை அச்சான் மவுசி என பெயர் வைத்து அழைத்து வந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஓட்டுனரின் மகன் இஸ்ரான் கான் கூறுகையில் மவுசு எங்கள் வீட்டிற்கு வந்த போது நான் சிறுவன்,

அவர் அடிக்கடி மாரத்தி மொழியில் ஏதேனும் புலம்புவார், பின்பு அவர் குடும்பத்தினர் குறித்த தகவலை கேட்கும் போது எதுவும் கூறவில்லை. மவுசி குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன் ஆனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அந்த பெண் கஞ்மா நகர் என்ற ஒரு இடத்தைப் பற்றி கூறவார். ஆனால் கூகுளில் அதுபோன்ற இடம் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை என்றார்.

மேலும் ஊரடங்கு காலத்தில் மவுசி,பரஸ்பூர் என்ற இடத்தை கூறியுள்ளார். அதனை இஸ்ரான் கான் கூகுள் செய்து தேடியுள்ளார்,அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் அப்படி ஒரு ஊர் இருப்பது தெரிய வந்தது. பின்பு இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் பரஸ்பூர் பகுதியில் கடை நடத்தி வரும் நபர் ஒருவரை தொடர்பு கொண்ட இஸ்ரான், மவுசு குறித்த தகவலை கூறி வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவை கடை நடத்தி வரும் நபர் தனது வாட்ஸ்அப் வழியாக அனைவருக்கும் பகிர பிரித்வி என்பவர் அது தனது பாட்டி தான் எனக் கூறி, இஸ்ரானை தொடர்பு கொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மத்திய பிரதேச மாநிலம் செல்ல முடியாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக தனது பாட்டியை பிரித்வி அழைத்து வந்துள்ளார்.
|
மேலும் தனது பாட்டி மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1979-ம் ஆண்டு சிகிச்சைக்காக நாக்பூர் சென்ற போது அவர் மாயமானதாக பிரித்வி தெரிவித்தார். பின்பு பிரித்வியின் தந்தை தனது தாயை பல நாட்கள் தேடி அலைந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு அவர் உயிரிழந்து விட்டார்.

அதற்குமுன்பு தனது பாட்டி கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என பிரித்வி தெரிவித்துள்ளார். கடந்த 40வருடங்களுக்கு முன்பு தொலைந்த பெண் ஒருவர் இப்போதுள்ள இணையம் மற்றும் சமூகவலைதள உதவியால் தனது குடும்பத்தாருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470