போன் வெடித்து உயிரிழந்த பெண்? என்ன சொல்லப் போகிறது Xiaomi.!
கம்மி விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று அவசரப்பட்டு தரம் இல்லாத போன்களை எப்போதும் வாங்கக் கூடாது. ஏனெனில் தரம் இல்லாத போன்கள் கண்டிப்பாக பாதிப்பை கொண்டுவரும்.

சீன நிறுவனங்கள்
அதேபோல் பண்டிகை காலங்களில் சலுகை விலையில் கிடைக்கும் போன்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அவற்றின் தரம் போன்றவற்றை பார்த்து அதன்பின்பு வாங்குவது மிகவும் நல்லது. குறிப்பாக இந்தியாவில் சீன நிறுவனங்களின் போன்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. சில நிறுவனங்கள் சிறந்த உறுதித்தன்மை கொண்ட போன்களை அறிமுகம் செய்கின்றன.

தரம் இல்லாத மொபைல்
ஆனால் சில நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அதாவது தரம் இல்லாத மொபைல்களை கொண்டுவருகின்றன. இந்நிலையில் டெல்லி என்சிஆர் பகுதியில் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 6ஏ எனும் போன் வெடித்து ஒரு பெண் இறந்ததாகக் கூறப்படுகிறது.

யூடியூபரின் அத்தை
அதாவது பிரபல யூடியூபர் ஒருவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியாக உள்ளது. இந்த யூடியூபரின் அத்தை இரவு தூங்கும் போது
ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனை தலையணைக்கு அருகில் முகத்திற்கு நேராக வைத்திருந்தார் எனவும், அந்த போன் வெடித்து அவரது உயிரைப்
பறித்ததாகக் கூறப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

மனு குமார் ஜெயின்
மேலும் இது எங்களுக்கு மோசமான நேரம். இந்த நேரத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பிராண்டின் பொறுப்பு என்று அந்த யூடியூபர் ட்விட்டரில் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதுதவிர அந்த ட்விட்டர் பதிவில் ட்விட்டர் இந்தியா, மனு குமார் ஜெயின் ஆகியோரை டேக் செய்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் வெளியாகி இருக்கும் படங்கள்
அதேபோல் பேட்டரி வெடித்ததால் போன் முழுமையாக எரிந்தது எனவும், இதன் காரணமாக அதில் இருந்த டிஸ்பிளே உடைந்து பின்புற பேனல் முழுமையாக சேதமடைந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் படங்களில் உயிரிழந்த பெண் படுத்திருந்த பகுதி முழுக்க இரத்தத்தை காண முடிகிறது.

சியோமி நிறுவனம்
போன் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து சியோமி நிறுவனம் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. பின்பு உயிரிழப்பு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் சியோமி நிறுவனம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பேட்டரி
போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.
எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும்.
அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுவது மிகவும்நல்லது.

பாதுகாப்பு அம்சம்
அதேபோல் குறைந்த விலை போன்களை தேர்வுசெய்வதை விட, போன்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சம், சிப்செட், பேட்டரி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு அதன்பின்பு போன்களை வாங்குவது மிகவும் நல்லது.
images Courtesy: MD Talk


Click it and Unblock the Notifications