வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவீர்களா? ஆய்வில் கலந்து கொண்டு பதில் அளித்த இந்தியர்கள்.!
அண்மையில் வாட்ஸ்அப் கொண்டுவந்த தனியுரிமைக் கொள்கையை (பிரைவசி பாலிசி) மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது குறித்து இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது வாட்ஸ்அப்
தலைமை நிர்வாக அதிகாரி வில் காட்கார்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குறிப்பாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா உள்ளது என்றும், பின்பு அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஆனது இந்திய மக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவீர்களா என்ற கோணத்தில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்டு பதில் அளித்த இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் சிறந்த பதிலை வழங்கி உள்ளனர்.

அதாவது ஆய்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்து வேண்டுமா என்பதை பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இதர 28 சதவீதம் பேர் மே மாதம் புது பிரைவசி மாற்றப்பட்டால் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய திட்டமிடுவதாக தெரிவித்தனர்.

குறிப்பாக குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனமான சைபர்மீடியா ரிசர்ச் இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறது. இதில் கலந்து கொண்டவர்களில் 41 சதவீதம் பேர் டெலிகிராம் செயலியையும், 35 சதவீதம் பேர் சிக்னல் செயலியையும் பயன்படுத்த போவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றான தளங்களை பொருத்தவரை பயனர்கள் டெலிகிராம் செயலி மீது அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். பின்பு இந்த ஆய்வில் எட்டு நகரங்களை சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொண்டு பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications