சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் ஜன.1ம் தேதி முதல் செல்லாது.!
சிப் பொருத்தாத டெபிட், கிரெடிட் கார்டு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் செல்ல என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி சிப் பொறுத்த வில்லை என்றால் எந்த ஏடிஎம்களிலும், ஸ்வைப் மெஷின்களிலும் பயன்பாடுத்த
சிப் பொருத்தாத டெபிட், கிரெடிட் கார்டு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் செல்ல என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி சிப் பொறுத்த வில்லை என்றால் எந்த ஏடிஎம்களிலும், ஸ்வைப் மெஷின்களிலும் பயன்பாடுத்த முடியாது.
அந்த கார்டுகளை நாம் வீட்டில் தெரியாமல் வைத்து இருந்தாலும், நாம் அவைகளை தூக்கி குப்பையில் தான் போட வேண்டும்.

ஏற்கனவே பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, ரூபாய் மதிப்பு இழப்பு உள்ளிட்டவைகளால் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலையில், தற்போது, இந்த ஏடிஎம்களுக்காக கிராம புற மக்கள் அழைக்கப்படுவார்கள் என்பது சந்தேகமில்லை.
இவைகள் ஒரு புறம் மக்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்தாலும் மறுபுறம் மக்களுக்கு வீண் அலைச்சல் போல உருவாகியுள்ளது.

பணப்புழகத்தில் இருக்கும் கார்டுகள்:
யூரோ பே, மாஸ்டர், விசா, யூபே உள்ளிட்ட கார்டுகள் டெபிட் மற்றும் கிரரெடிட் கார்டுகள் மக்களிடம் பெரும்பாலும் பணம் புழகத்திற்காக பொது மக்களிடம் இருக்கின்றன.
இதை பயன்படுத்தி கிராம புறங்கள் முதல் நகரங்கள் வரை பணம் எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் ஏடிஎம், ஸ்வைப் மிஷன்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

சிப் பொறுத்தவில்லை:
2008-க்கு முன் வங்கிகளால் வழங்கப்பட்ட யூரோ பே, மாஸ்டர் கார்ட், விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்ற சிப் பொருத்தப்பட்டிருக்கவில்லை.

பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை:
அதன் பின் சில வங்கிகளால் விநியோகிக்கப்பட்ட கார்டுகளிலும் மேக்னடிக் ஸ்டிரைப் மட்டுமே உள்ளது. அதை எளிதில் ஸ்கிம்மர் கருவிகள் மூலம் மாற்றிவிட முடியும் என்பதால், சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை விநியோகிக்க 2015-ம் ஆண்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

ரிசர்வ் வங்கி அறிவுரை:
அதற்கான அவகாசமாக வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை வங்கிகளுக்கு அவகாசம் வழங்கியிருந்தது. எனவே, சிம் போன்ற சிப் பொருத்தப்படாத பழைய மேக்னடிக் ஸ்டிரைப் கார்டுகளை மாற்றி, சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்குமாறு வங்கிகளிடம் வாடிக்கையாளர்கள் கோரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜன.1 முதல் செல்லாது:
ஜனவரி 1, 2019-க்கு முதல் சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கிராம புற மக்கள் ஏடிஎம்கார்களுக்காக வங்கிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications