பங்குகளை வாரி வழங்கும் கூகுள் வாங்க மறுக்கும்- சுந்தர் பிச்சை.!
கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் சுந்தர் பிச்சை தான் கவனித்து வருகின்றார். அல்லும் ஒல்லும் ஓயாது கூகுள் நிறுவனத்துக்காக உழைத்து வருகின்றார். இதனால், கூகுள் நிறுவனம் சுந்தர்பிச்சைக்கு பல
கூகுள் நிறுவனத்தின் கடை நிலை ஊழியராக சேர்ந்து இன்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருகின்றார் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்து சுந்தர் பிச்சை இல்லாமல் ஒரு அனுவும் அசையாது என்று கூறாலம்.
கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் சுந்தர் பிச்சை தான் கவனித்து வருகின்றார். அல்லும் ஒல்லும் ஓயாது கூகுள் நிறுவனத்துக்காக உழைத்து வருகின்றார்.

இதனால், கூகுள் நிறுவனம் சுந்தர்பிச்சைக்கு பல்வேறு வெகுமதிகளை கொட்டி வருகின்றது. இந்நிலையில், இனமாக கூகுள் நிறுவனம் பங்குகளை கொடுத்தும் சுந்தர்பிச்சை வாங்க மறுத்துள்ளார். ஏன் வாங்க மறுத்தார் என்று காணலாம்.

கடை நிலை ஊழியர்:
கூகுள் நிறுவனத்தில் ஆரம்பத்தில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்தார் சுந்தர் பிச்சை. இவரது உழைப்பும், தனித்திறன் பணியும் இவரை ஊழியர்களிடம், முதலாளிகளிடம் கவர்ந்தது.
இதன் பயனாக ஆரம்ப நிலையில் இருந்த கூகுள் நிறுவனம் அடுத்தகட்டத்திற்கு செல்ல வழி வகுத்தவர் சுந்தர் பிச்சை எனலாம். கூகுள் நிறுவனம் புதிய சர்ச் இன்ஜின் உருவாவதற்கு இவரே காரணம்.

வேலைக்கு அழைத்த மற்ற நிறுவனங்கள்:
இவரின் தனித்திறமையும், பணி செய்யும் விதத்தையும் பார்த்து மற்ற நிறுவனங்கள் உடடினயாக பணியாணை ஆடர் மற்றும் சம்பள உயர்வுடன் தலைமை பொறுப்பையும் வகித்த அழைப்பும் விடுத்தன. ஆனால், இதை சுந்தர் பிச்சை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதுகுறித்து வெளிப்படையாக கூகுள் நிறுவனத்தின் லாரிபேஜ்டம் தெரிவித்தார். மேலும் நான் கூகுளை விட்டு செல்லமாட்டேன். எனக்கும் ஆயிரம் கனவுகள் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் வெகுமதிகளை அள்ளி வீசியது.

சிஇஓ ஆனார் சுந்தர்:
இவரின் செயல்பாடுகளை கண்டு கூகுள் நிறுவனம் பல்வேறு வெகு மதிகளையும் கொட்டியது. பிறகு,
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) 2015ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். 46 வயதான இவர் பொறுப்பேற்றதும் கூகுள் நிறுவனத்தில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

பங்குகளை கொட்டிய கூகுள்:
குறிப்பாக சாப்ட்வேர் துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஹார்டவேர் தயாரிப்புகளையும் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தார். இதனால் கூகுள் நிறுவனம் வேகமாக முன்னேறியது.
இதனால் சுந்தர் பிச்சையின் சிறப்பான செயல்பாட்டுக்காக 2015ஆம் ஆண்டு அவருக்கு கூகுள் நிறுவனம் 250 டாலர் மதிப்பிலான பங்குகளைக் கொடுத்தது. குறிப்பிட்ட பங்குகளை அவரது பெயருக்கு மாற்றியதும் கூகுள் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது.

2 ஆண்டாக பங்குகளை ஏற்கவில்லை:
தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களில் மிக அதிக சம்பளம் பெறுபவராக சுந்தர் பிச்சை உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுந்தர் பிச்சை கூகுள் தனக்கு அளிக்க முன்வந்த பங்குகளை ஏற்க மறுத்துள்ளார்.
ஏற்கெனவே தனக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதால் இதனை வாங்கிக்கொள்ளவில்லை என சிலர் தெரிவிக்கிறார்கள்.

ஊழியர்கள் அதிருப்பதி:
சுந்தர் பிச்சைக்கு வழங்கும் சம்பளம் நிறுவனத்தில் உள்ள மற்றவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தை
விட மிக அதிகமாக இருக்கிறது என சில ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications