ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்!
குபேர்டினோவை தலைமையிடமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நேற்று தனது காலாண்டு முடிவுகளை அறிவித்தது. இந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 64 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இது முந்தைய ஆண்டின் காலாண்டை காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.மேலும் அந்நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளில் சர்வதேச விற்பனையையும் சுட்டிக்காட்டியுள்ளது.

1) இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஆப்பிள் மேக்புக்
முந்தைய காலாண்டில், மேக்புக்ஸைப் பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் தனது முந்தைய வருவாயை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

2) மிகவும் பிரபலமாகி வரும் ஆப்பிள் வாட்ச்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது வாட்ச் சீரிஸ் 5 ஐ அறிமுகப்படுத்தியது. எண்களில் செல்ல வேண்டுமானால் இந்தியாவில் இதன் விற்பனை நன்றாகவே செல்கிறது. நான்காம் காலாண்டில் ஆப்பிள் வாட்ச்-ஐ உள்ளடக்கிய அணியக்கூடிய பொருட்களுக்கான சாதனையை ஆப்பிள்
நிறுவனம் இந்தியாவில் படைத்தது.

3)அதிகமானோரால் விரும்பப்படும் ஆப்பிள் ஏர்பாட்ஸ்
அணியக்கூடிய பொருட்கள் பிரிவில் ஏர்பாட்களும் இருப்பதால், வருவாய் அடிப்படையில் அவையும் சிறப்பாக செயல்படுகின்றன என்பதையே குறிக்கின்றன.

4) இந்தியாவில் நான்காம் காலாண்டில் சாதனை படைத்த ஆப்பிள்
இந்தியாவில், ஆப்பிள் நிறுவனம் நான்காம் காலாண்டில் முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், இது ஐபோனை விட அதிகமாக உள்ளது.

5) இன்னமும் ஐபோன் தான் மிகமுக்கிய சாதனம்
பிற ஆப்பிள் தயாரிப்புகளும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியைக் காட்டியிருந்தாலும், ஆப்பிள் இந்திய நாட்டில் அதன் வளர்ச்சியைத் தொடர முக்கிய காரணம் ஐபோன் தான்.

6) இந்தியாவில் விரைவில் ஆப்பிள் ஸ்டோர்
தனது ஒட்டுமொத்த நிலைக்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுக்க, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் சில்லறை விற்பனை நிலையத்தை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்ற நிலையில், அந்த முதல் ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications