முதலாளித்துவத்தை வெறுத்த ஐன்ஸ்டீன்! காரணம் என்ன?
"நேரம் - அதை திரும்பிப் பார்க்கும் போது, தனிநபர்கள் அல்லது ஒப்பீட்டளவில் சிறிய குழுக்கள் முற்றிலும் தன்னிறைவுடையதாக இருக்கும்போது, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று ஐன்ஸ்டீன் எழுதினார்.
எவ்வளவு ஆல்பன்ட் ஜன்ஸ்டீன் டீ சர்ட்கள் மற்றும் காபி மஃக்குகள் வந்தாலும், இந்த பிரபல இயற்பியலாளர் எப்போதும் முதலாளித்துவத்தை விரும்பியதில்லை. ஐன்ஸ்டீனின் பார்வையில் உலகம் என்பது, இதிலுள்ள சிஸ்டம் மனிதர்களை ஒருக்கொருவர் எதிராக திருப்புவது மட்டுமின்றி, அது மனிதர்களை இயற்கைக்கு எதிராகவும் திருப்புகிறது.

மனிதர்கள் சிறுசிறு குழுக்களாக வாழும் போது, அந்த சமூகம் அதன் உறுப்பினர்களை கவனித்துக்கொள்ளும்.

ஐன்ஸ்டீன்
"நேரம் - அதை திரும்பிப் பார்க்கும் போது, தனிநபர்கள் அல்லது ஒப்பீட்டளவில் சிறிய குழுக்கள் முற்றிலும் தன்னிறைவுடையதாக இருக்கும்போது, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று ஐன்ஸ்டீன் எழுதினார்.
மக்கள் தொடர்ந்து உணவு, வீட்டுவசதி மற்றும் வேலை போன்றவற்றிற்கு போட்டியிடும் உலகப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இப்போது நாம் இருக்கிறோம்.

முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகம்
சமுதாயத்தை சார்ந்திருத்தலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனிநபர்கள் அதிக கவனமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த சார்பு தன்மையை ஒரு கரிமப் பொருளாக, ஒரு பாதுகாப்பு சக்தியாக, மாறாக தனது இயற்கையான உரிமைகள் அல்லது அவருடைய பொருளாதார இருப்புக்கு அச்சுறுத்தலாக அவர்கள் கருதவில்லை என ஐன்ஸ்டீன் கூறுகிறார்.
தற்போதுள்ள முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகம், தீமைக்கான உண்மையான ஆதாரம் என்பது எனது கருத்து என்கிறார் ஐன்ஸ்டீன்.

மனிதர்கள்
மனிதர்கள் இயல்பாகவே ஒருவருக்கொருவர் போட்டியும் போடுகின்றனர் அதேசமயம் ஒத்துழைக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவம் போட்டியை ஊக்குவித்து ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தாமல் சமூகப் பிணைப்பை உடைக்கிறது.

முதலாளித்துவ வர்க்கம்
அனைத்து மனிதர்களும், சமுதாயத்தில் தங்கள் நிலை எதுவாக இருந்தாலும் சரி, இந்த சீரழிந்த முறையால் பாதிக்கப்படுகின்றனர். அறியாமலேயே தங்கள் சொந்த ஈகோவிடம் மாட்டிக்கொண்டு, அப்பாவியாகவும், பாதுகாப்பற்றாகவும் தனிமையையும் உணர்ந்து தங்களின் எளிய மற்றும் அசாதாரணமான வாழ்க்கை அனுபவத்தை இழந்தவர்களாக உணர்கிறார்கள் "என தொடர்கிறார் ஐன்ஸ்டீன்.
ஒத்துழைப்புள்ள சமூகங்களில் வாழ்வதற்கு பதிலாக, வணிகத் தலைவர்களை அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, இலாபத்திற்காக தங்கள் தொழிலாளர்களை சுரண்டுவதற்கு முதலாளித்துவ வர்க்கம் ஊக்கப்படுத்துகிறது.

வேலையற்ற இராணுவம்
"உற்பத்தி இலாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது, பயன்பாட்டிற்கு அல்ல"என்கிறார் ஐன்ஸ்டீன் . "ஒரு 'வேலையற்ற இராணுவம்' கிட்டத்தட்ட எப்போதும் உள்ளது ... தொழில்நுட்ப முன்னேற்றம் அனைத்துமே வேலைச்சுமையை தளர்த்தாமல் இன்னும் வேலையின்மைக்குத்தான் வழிவகுக்கிறது."
பள்ளிகளும் இயற்கைக்கு மாறாக போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கின்றன.

ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி
"முதலாளித்துவத்தின் மிக மோசமான தீமைகளை சிந்திப்பதை இந்த தனிநபர்கள் முடக்கியுள்ளனர், எங்கள் முழு கல்வி முறையும் இந்த தீமையினால் பாதிக்கப்படுகிறது," என்கிறார் ஐன்ஸ்டீன் . "ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவர்களிடத்தில் கற்பிக்கப்படுகிறது, அது அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் வெற்றியை பெறுவதற்கு மட்டுமே பயிற்சியளிக்கப்படுகிறது."

பிரபஞ்சம்
இந்த பிரச்சனை மனித சமுதாயத்திற்கானது மட்டும் அல்ல. மனிதர்களின் தவறான கற்பனை அவர்களை இயற்கையில் இருந்து துண்டித்துவிடுகிறது.
"மனிதர்கள் ஒட்டுமொத்தமாக பிரபஞ்சம் என்பதன் ஒரு பகுதியாக உள்ளனர்" என கூறும் ஐன்ஸ்டீன், மனிதன் அவனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மற்றவற்றில் இருந்து பிரித்தே உணருகிறான் என்கிறார்.
இந்த யோசனை வாழ்க்கையை ஒரு தனிமையான போராட்டமாக மாற்றிவிடும்.

விடுவிக்க வேண்டும்
"இந்த மாயை எங்களுக்கு ஒரு சிறைச்சாலையாக இருக்கிறது, எங்கள் தனிப்பட்ட ஆசைகள் மற்றும் நம் நெருங்கிய நபர்களை நேசிப்பதை கட்டுப்படுத்துகிறது" என கூறும் ஐன்ஸ்டீன், "எங்கள் பணி அனைத்து ஜீவன்களையும் , இயற்கையின் அழகு முழுவதையும் முழுமையாய்ச் தழுவிக் கொள்ளும் பொருட்டு, நமது எண்ணங்களை விரிவாக்குவதன் மூலம் இந்த சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்." என்கிறார் ஐன்ஸ்டீன்.


Click it and Unblock the Notifications