ஆதார் ஆணையத்துக்கு எதிராக கொதித்த மக்கள்.!
இதுகுறித்து டுவிட்டரில் பொது மக்கள் ஆதாருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்றை காலத்தில் இந்தியருக்கு ஆதார் இல்லை என்றால் ஆதாரமற்ற மனிதனாகவே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பிறப்பை தொடர்ந்து இறந்த பிறகு அடக்கம் செய்ய ஆதார் அவசியமாகிறது.

அரசின் திட்டங்களுக்கும் வங்கி, கேஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு ஆதார் முக்கிய ஆதரமாகவே பார்க்கபடுகிறது.

ஆதார் மீது குற்றச்சாட்டு:
ஆதாரின் பழைய இலவச உதவி தொலைபேசி எண்ணை, ஸ்மார்ட் போன்களில் தானாகே பதிவு செய்ய ஆதார் ஆணையம் வலியுறுத்தியதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

ஆதார் ஆணையம் மறுப்பு:
ஆதார் ஆடிணையம், தொலைதொடர்பு நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களிடம் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

செயல்படதா எண்கள்:
பழைய செல்போன் எண்களான 1800-300-1947 ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் சேர்க்க ஆதார் ஆணையம் யாரிடமும் வலியுறுத்தவில்லை. இதை யாரரோ திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். மேலும் 1947 என்ற எண்ணே சேவையில் இருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

தானாக பதிவான எண்கள்:
இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் இதுதான் ஆதாரின் சேவை எண் என்று பதிவாகி உள்ளது. இதனால் பொது மக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டுவிட்டரில் எதிரான கருத்து:
இதுகுறித்து டுவிட்டரில் பொது மக்கள் ஆதாருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆதார் எண்ணை கடந்த வாரம் டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய டிராய் அமைப்பு சேர்மேன் ஷர்மா பிரச்னை அடங்குவதற்குள்ள இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications