Home
News

ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.!

காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது என்பது ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் ஆகும் என பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்.

ஹேக் செய்ய முடியாது

ஹேக் செய்ய முடியாது

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குறை சொல்வதும், அதன் மீது பழி போடுவதும் தற்போதைய இப்போது ட்ரண்ட் ஆகி விட்டது. மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது தான் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் ஆகும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்ற தேர்தல் கமிஷனின் சவாலை ஏற்க மறுக்கிறது காங்கிரஸ்.

தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்

தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்

தேர்தல் செயல்முறை கணிசமாக முன்னேறியுள்ளது. மேம்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. முதலில் தேர்தல் நடக்கும் போது ஒரு தலைப்பு இருந்தது, தேர்தலின் போது எவ்வளவு வன்முறை நடந்தது என்று, ஆனால் இன்றைய தலைப்பு என்னவென்றால், முந்தையதை தேர்தலை விட இந்த தேர்தலில் எவ்வளவு வாக்களிக்கப்பட்டு என்ற ஒப்பிடும் தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் எங்கள் வெற்றியும் அவர்களின் தோல்வியையும் காங்கிரசால்
ஜீரணிக்க முடியவில்லை.

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

ஈவிஎம் என அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ( EVM -electronic voting machine ), 1982 ல் பழைய வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னணு சர்க்யூட்களை கொண்டு எளிமையான பெட்டியை போல தோற்றமளிக்கும் இதில், ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயர் ,கட்சி மற்றும் சின்னத்திற்கு எதிராக பொத்தானை கொண்டிருக்கும்.

தன்னை தானே லாக்  செய்துகொள்ளும்

தன்னை தானே லாக் செய்துகொள்ளும்

வாக்காளர்கள் வெறுமனே தங்கள் விருப்ப வேட்பாளருக்கு அடுத்ததாக உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அவர்களின் வாக்குகளை செலுத்தமுடியும். மேலும் ஒருவரே பல வாக்குகள் செலுத்துவதை தடுக்கும் வகையில் இயந்திரம் தன்னை தானே லாக் செய்துகொள்ளும். அடுத்த வாக்காளர்கள் தங்களுக்கு தனித்துவமாக வழங்கப்பட்ட வாக்குஎண்ணைகளை பயன்படுத்தி மட்டுமே
தங்களது வாக்குகளை செலுத்த முடியும்.

குழப்பமான சூழ்நிலைக்கான வாய்ப்புகள்

குழப்பமான சூழ்நிலைக்கான வாய்ப்புகள்

காகித வாக்குச்சீட்டு முறைக்கு பதிலாக ஒரு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கான மிகவும் முக்கிய மற்றும் வெளிப்படையான நன்மை, நாம் டன் காகிதத்தை வீணடிக்கவில்லை என்பது தான். இந்த செயல்முறையில் ஒரு பொத்தானை அழுத்துவதற்கு மட்டுமே வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது குழப்பமான சூழ்நிலைக்கான வாய்ப்புகள் குறைவாகவே
உள்ளது.

ஒப்புகைச்சீட்டு வழங்கும்  விவிபேட்

ஒப்புகைச்சீட்டு வழங்கும் விவிபேட்

2013 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை சரிபார்க்க ஒப்புகைச்சீட்டு வழங்கும் விவிபேட் (VVPat - Voter-Verified Paper Audit Trail) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய பிறகு, நேரடியாக இயந்திரத்தில் இருந்து ஒரு அச்சிடப்பட்ட ரசீதை காண முடியும். எனவே சரியான வேட்பாளர்க்கு வாக்களித்ததை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.

ரூ 5000 முதல்  ரூ6000

ரூ 5000 முதல் ரூ6000

இதிலுள்ள மற்றொரு நன்மை என்னவெனில், வாக்குப்பதிவு முதல் வாக்குஎண்ணிக்கை வரை அனைத்தும் வேகமாக நடைபெறும். இவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறுவதோடு மட்டுமில்லாமல் , ஒரு மின்னணு இயந்திரத்தை வாங்குவதற்கான செலவான ரூ 5000 முதல்
ரூ6000 தவிர, டன் கணக்கில் பணத்தையும் இவை சேமிக்கின்றன.

இயந்திரத்தை குறை கூறுகிறார்கள்

இயந்திரத்தை குறை கூறுகிறார்கள்

மேலும் இன்று பிரதமர் கூறியது என்றவென்றால் ஈ.வி.எம் பற்றிய விவாதம் 1977 இல் தொடங்கியது, முதலில் 1988 ஆம் ஆண்டில், அதற்கு சட்ட அனுமதி வழங்கப்பட்டது 1992 இல் காங்கிரஸ் தலைவர்கள் தான் மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கான விதிகளை உருவாக்கினர். இன்று காங்கிரஸ் வெற்றியை இழந்திருப்பதால் ஈ.வி.எம் இயந்திரத்தை குறை கூறுகிறார்கள் எனக் கூறினார்.

Best Mobiles in India

English summary
when-theres-no-self-confidence-people-start-looking-for-excuses-pm-modi-flays-congresss-doubt-on-evm: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X