'ரொம்ப நல்லவராக இருக்காதே: இந்திரா நூயிக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அறிவுரை.!
ரொம்ப நல்லவராக இருக்க வேண்டாம்' என்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் இடம் இருந்து புரிந்து கொண்டதாகவும் இந்திரா நூயி,தெரிவித்துள்ளார்.
பெப்சிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவழி பெண்ணான இந்திரா நூயி, தான் ஐபோன் அரசன் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களிடம் அறிவுரை பெற்றதாக தெரிந்த்துள்ளார்.

பிரபல பத்திரிகை ஒன்றுக்குக் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, 'ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களிடம் இருந்து பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் குறிப்பாக 'ரொம்ப நல்லவராக இருக்க வேண்டாம்' என்பதை அவரிடம் இருந்து புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாப்ஸ்
மேலும் "நீங்கள் உண்மையிலேயே உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களோ, அது நிறுவனத்தின் சரியான விஷயம் என்று நம்புகிறேன்," என்று ஜாப்ஸ் கூறிய்தாகவும், "அது ஒரு ஆவேசமான எழுச்சியை தூக்கி போடுவதாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்

நியூயார்க் டைம்ஸ்
"ஆப்பிள் நிறுவனம் தனது ஆரம்ப ஆண்டுகளில், அவரது விவரங்களை மந்தமான சகாக்கள் அவரது தலையீடு, மற்றும் அவரது கெட்ட விமர்சனம் மற்றும் கூடஅவமானகரமான முடிவுகள் கிடைத்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் அவரது வளர்ச்சி அபரீதமாக இருந்ததாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தது

இந்திரா நூயி
62 வயதான இந்திரா நூயி, தனது தனிப்பட்ட திறமையால் நிறுவனத்தை செவ்வனே வழிநடத்தினார். உலக அளவில் பெப்சி நிறுவனத்தின் ஸ்னாக்ஸ் மற்றும் குளிர் பானங்களை கொண்டு சென்ற பெருமை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருந்த இவரையே சாரும்

ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுரை
ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுரையை அவர் பின்பற்றாததால் என்ன ஆயிற்று? காகிதங்களை எறிவதை சில காலம் நிறுத்திவிட்டார். மேலும் முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகமான குரல்களை எழுப்பியதாக என்று ஒப்புக்கொண்டார். ஆனால் 'நான் என்ன செய்கிறேனோ அதையே நான் விரும்புகிறேன் என்பதில் ஆணித்தரமாக இருந்தார்.

22 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம்
சென்னையில் பிறந்து வளர்ந்து பெப்சிகோ நிறுவனத்தில் 24 வருடங்கள் பணிபுரிந்த நூயி தற்போது அந்நிறுவனத்தின் பதவியில் இருந்து கீழே இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்த நிறுவனத்தில் 22 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ள ரேமோன் லாகுர்ட்டா என்பவர் பதவியேற்க உள்ளார்.

பெப்சிகோ
வளர்ந்து வரும் இந்திய தேசத்தில் எனக்கு பெப்சிகோ நிறுவனத்தை விட வேறு ஒரு சிறந்த நிறுவனத்தை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று இந்திரா நூயி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு வரை அதே நிறுவனத்தில் சேர்மேனாக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications