பாதுகாப்பான வாட்ஸ்ஆப் : இந்தியாவில் முளைத்த புதிய சிக்கல்.!
வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்கள் என்க்ரிப்ஷன் மூலம் அதிக பாதுகாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் வாட்ஸ்ஆப் செயலியின் பயன்பாட்டிற்கு இந்தியாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு இந்திய தொலைதொடர்பு நிறுவனம் விதித்த புதிய விதியின் படி தனியார் நிறுவனங்கள் அதிகபட்சம் 40-பிட் வரை என்க்ரிப்ஷன் பயன்படுத்த முடியும். ஆனால் தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலி தனது குறுந்தகவல்களில் 256-பிட் என்க்ரிப்ஷன் பயன்படுத்துகின்றது. இது இந்திய விதிமுறைகளின் படி அதிகமாகும்.

தற்சமயம் வரை இந்திய அரசு சார்பில் வாட்ஸ்ஆப் செயலி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும் முன்னதாக ப்ளாக்பெரி உள்ளிட்ட நிறுவனங்கள் என்க்ரிப்ஷன் விதிமுறையில் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
'யாராலும் ஊடுறுவ முடியாது' பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!!
வாட்ஸ்ஆப் என்க்ரிப்ஷன் : இது தான் புது சங்கதி, உங்களுக்கு தெரியுமா.!?


Click it and Unblock the Notifications