வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி: பயனர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வருமா?
வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. தொடர்ந்து இந்நிறுவனம் புதிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் செயலியில் கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

வாட்ஸ்அப் நிறுவனம்
வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை தொடர்பான புதிய கொள்கைகளை (வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி) மே 15-ம் தேதிக்குள் ஏற்க வேண்டும் என்ற கால அவகாசத்தை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது வாட்ஸ்அப் செயலி ஆனது அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களை புகுத்தியது. அதன்படி இந்த வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவோரின் தகவல்களை திரட்டி அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பதும் புதிய கொள்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது. எனவே இந்த புதிய கொள்கைகளை மே 15-ம் தேதிக்குள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ்அப்
வாடிக்கையாளர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வாட்ஸ்அப் புதிய கொள்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்பு இதை தொடர்ந்து புதிய கொள்கைகளின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்தது.

வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர்
வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், தனியுரிமை தொடர்பான கொள்கைகளை ஏற்பதற்கு மே 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசத்திற்கு பிறகும் புதிய கொள்கைகளை ஏற்காதவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படாது என்று கூறியுள்ளார். குறிப்பாக தனியுரிமை தொடர்பான கொள்கைகளை ஏற்கவில்லை என்றாலும் கூட வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும், பின்பு அதிக பயனாளர்கள் புதிய கொள்கைகளை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர சில பயனாளர்களே இந்த கொள்கைகளை ஏற்கவில்லை அவர்களுக்கு தனியுரிமை தொடர்பான புதிய கொள்கை நினைவூட்டல் விரைவில் அனுப்பப்படும் என்று கூறியுள்ளார் வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர்.

தனியுரிமை கொள்கை நினைவூட்டல்
மேலும் தனியுரிமை கொள்கை நினைவூட்டல், பயனாளிகளுக்கு அவ்வப்போது அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் சில வாரங்களுக்கு பின்னர் வாட்ஸ்அப் செயலியில் அந்த நினைவூட்டல் நிரந்தரமாகத் தென்படும் என்றும், புதிய கொள்கையை ஏற்கும் வரை பயனாளிகளுக்கு சேவைகள் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதாவது நினைவூட்டல்களுக்குப் பின்னும் பயனாளர் புதிய கொள்கைகளை ஏற்காவிட்டால், ஒரு கட்டத்தில் அவரால் சாட் லிஸ்டை பயன்படுத்த முடியாது. அதேபோல் வெளியில் இருந்து வரும் அழைப்புகள், வீடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். ஏதேனும் அறிவிப்புகள் வந்தால் உடனே திறந்து படிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேவைகள் குறைக்கப்பட் சில வாரங்கள் கழித்தும் புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்காவிட்டால் வெளியில் இருந்து வரும் அழைப்புகளும் நிறுத்தப்படும். ஆனால் புதிய கொள்கையை ஏற்காத பயனாளிகளின் கணக்குகள் நீக்கப்படாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News Source: http://livemint.com/


Click it and Unblock the Notifications