Just In
- 9 hrs ago
சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!
- 10 hrs ago
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இதோ வழிமுறைகள்.!
- 12 hrs ago
பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!
- 13 hrs ago
Vi அறிமுகம் செய்யும் MFine ஈசி மொபைல் மருத்துவ பரிசோதனை.. எல்லா மருத்துவ சேவையும் இனி உங்கள் கையில்..
Don't Miss
- News
33ம் நபர் பனியன்.. முதல் பரிசு வாங்க வீரர் செஞ்ச வேலை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்!
- Automobiles
2 விதமாக பயன்படுத்திக்கலாம்! இந்தியாவில் அறிமுகமானது வாகன பதிவு தேவைப்படாத ஒகினவா மின்சார ஸ்கூட்டர்!
- Movies
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதையெல்லாம் நாங்க பண்ண மாட்டோம்: வாட்ஸ்அப்பின் புதிய அறிக்கை.!
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

குறிப்பாக பாகுபலி போல் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது சிக்னல் ஆப். அண்மையில் வெளிவந்த தகவலின்படி, சிக்னல் ஆப்பை இன்ஸ்டால் செய்த புதிய பயனர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளது.

மேலும் வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தணை என அனைத்து வாட்ஸ்அப் சர்வரில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் வருத்தம் அடைந்த பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலியை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
வாட்ஸ்அப் குரூப்பை அப்படியே புதிய பொலிவுடன் சிக்னல் ஆப்ஸிற்கு ஈஸியா மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட்டர் வழியாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் புதிய ப்ரைவஸி அப்டேட் ஆனது நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரும் மெசேஜ்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளது.

வெளிவந்த அறிக்கையின்படி, தனிப்பட்ட மெசேஜ்கள் தொடர்ந்து எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு பாதுகாப்பதில் நாங்கள் 100 சதவிகிதம் தெளிவாக இருக்கிறோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் கூறிய தகவலின்படி, வாட்ஸ்அப் செயலியும், பேஸ்புக்கும் உங்களது தனிப்பட்ட மெசேஜை அணுகவோ அல்லது உங்களது அழைப்புகளை கேட்கவோ முடியாது.
அதேபோல் நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்கிறீர்கள், யாருக்கு கால் செய்கிறீர்கள் என்கிற தகவலை வாட்ஸ்அப் நிறுவனம்
சேகரிக்காது.

குறிப்பாக நீங்கள் பகிரும் லோக்கேஷனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பார்க்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாட்ஸ்அப் உங்களது தொடர்புகளை பேஸ்புக் நிறுவனத்திடம் பகிராது. அதேபோல் வாட்ஸ்அப் க்ரூப் எப்போதும் போல் தனியுரிமைமிக்கதாக இருக்கும்.
|
பின்பு உங்களது மெசேஜை டிஸ்ஸப்பியர் செய்ய முடியும். அதேபோல் உங்களது டேட்டாவை நீங்களே டவுன்லோட் செய்ய முடியும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190