வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
சமூகவலைதளங்களில் பிரதானமாக திகழும் வாட்ஸ்அப், மே 15 ஆம் தேதியன்று புதிய வணிக விருப்பங்கள் கிடைப்பதற்கு முன்பாக பயனர்களின் கொள்கையை அவர்களின் வேகத்திற்கு ஏற்ப மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும் என தெரிவித்துள்ளது. அதோடு பிப்ரவரி 8 ஆம் தேதி யாருடைய சேவையும் துண்டிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் தெரிவித்துள்ள விளக்கம்
வாட்ஸ்அப் தெரிவித்துள்ளபடி, ஏணைய தவறான தகவல்கள் பயனர்களிடம் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய கொள்கை எந்தளவு குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பலரிடம் இருந்து அறிந்தோம். புதிய கொள்கைகளின் உண்மைகள் புரிதலுக்கு உதவ விரும்புகிறோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்
எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனில் வாட்ஸ்அப் நிறுவனம் உறுதியுடன் இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு பேஸ்புக் உடன் தரவைப் பகிரும் திறனை விரிவாக்காது. விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து பயனர்கள் புரிந்து கொள்வதற்கு நிறைய நேரம் வழங்குவதை உறுதி செய்வோம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதிவுகளை வைத்திருக்க மாட்டோம்
உங்கள் தனிப்பட்ட செய்திகளை எங்களால் பார்க்கவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது எனவும் மேலும் பேஸ்புக்காலும் முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்க மாட்டோம் எனவும் பகிரப்பட்ட இருப்பிடத்தை எங்களாலும் பேஸ்புக்காலும் பார்க்க முடியாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதான சமூகவலைதளம்
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும்.
புதிய நிபந்தனைகளும் ரகசிய காப்பு விதிகளும்
வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பயனர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தணை என அனைத்து வாட்ஸ்அப் சர்வரில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
பாதுகாப்பில் 100 சதவீதம் தெளிவு
இந்த தகவல் பயனர்களை அதிருப்தி ஏற்படுத்திய நிலையில் புதிய ப்ரைவஸி அப்டேட் ஆனது நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரும் மெசேஜ்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என நிறுவனம் கூறியது. தனிப்பட்ட மெசேஜ்கள் தொடர்ந்து எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு பாதுகாப்பதில் நாங்கள் 100 சதவீதம் தெளிவாக இருக்கிறோம் எனவும் நிறுவனம் குறிப்பிட்டது.
தனியுரிமைமிக்கதாக இருக்கும்
மேலும் வாட்ஸ்அப் உங்களது தொடர்புகளை பேஸ்புக் நிறுவனத்திடம் பகிராது. அதேபோல் வாட்ஸ்அப் க்ரூப் எப்போதும் போல் தனியுரிமைமிக்கதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: ndtv.com


Click it and Unblock the Notifications